பெரம்பலூரில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடியை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட துணிகரச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடி வெள்ளை காளி என்பவர் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரவுடி வெள்ளை காளி மீது ஒன்பது கொலை வழக்குகள் எட்டு கொலை முயற்சி வழக்குகள் 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை டோல்கேட் அருகே ரவுடி வெள்ளை காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட துணிகரச் சம்பவம் நிகழ்ந்தது. தடுப்புகளை உடைத்துக் கொண்டு கார்கள் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக ரவுடி கொட்டு ராஜா என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இதையும் படிங்க: சொத்துகளை விற்று செட்டில்மென்ட்..! தேவநாதன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்...!
நாட்டு வெடிகுண்டு வீசி போலீசாரை தாக்கம் முயன்ற நிலையில் தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாகவும் அவர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் ஆறு பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: சிக்கி தவிக்கும் ஜனநாயகன்... காரசார வாதம்.. தீர்ப்பு எப்போது?