• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தேசிய விருது முக்கியமில்லை.. மக்கள் கொடுக்கும் அங்கிகாரமே மிகப்பெரிய விருது..!! மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்..!

    இயக்குநர் மிஷ்கின் தேசிய விருது முக்கியமில்லை, மக்கள் கொடுக்கும் அங்கிகாரமே மிகப்பெரிய விருது என ஓபனாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Mon, 20 Jul 2026 13:18:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-a-good-film-does-not-need-an-award-director-mysskin-tamilcinema

    தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கி, வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் மிஷ்கின், திரைப்பட விருதுகள் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. விருதுகள் ஒரு படைப்பாளிக்கு ஊக்கத்தை அளிக்குமே தவிர, ஒரு நல்ல திரைப்படத்தின் தரத்தை நிர்ணயிக்கும் ஒரே அளவுகோல் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் மிஷ்கின், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது விருதுகளை மட்டுமே சார்ந்தது அல்ல என்றும், மக்கள் அளிக்கும் வரவேற்பே ஒரு கலைஞருக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என்றும் தெரிவித்தார்.

    சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் பல்வேறு மொழிகளை சேர்ந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் விருதுகளை பெற்ற நிலையில், சில முக்கியமான திரைப்படங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன. குறிப்பாக, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சில திரைப்படங்கள் தேசிய விருது பட்டியலில் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வந்தனர்.

    இதையும் படிங்க: ‘ஜனநாயகன்’ படத்துல 3 அமைச்சர்களா..!! வெளியீட்டுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தும் புதிய தகவல்..!

    a-good-film-does-not-need-an-award-director-mysskin

    இந்த விவாதங்கள் குறித்து மிஷ்கினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், விருதுகளைப் பற்றிய தனது பார்வையை தெளிவாக எடுத்துரைத்தார். "ஒரு நல்ல திரைப்படத்திற்கு விருது தேவை கிடையாது. விருது என்பது ஒரு ஊக்கம் மட்டுமே. ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் அங்கீகாரமாக அது இருக்கலாம். ஆனால், ஒரு திரைப்படத்தின் மதிப்பை விருது மட்டுமே தீர்மானிக்காது" என்று அவர் கூறினார். மேலும், சில திரைப்படங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவோ, குறை கூறவோ தேவையில்லை என்றும் மிஷ்கின் குறிப்பிட்டார்.

    "தங்கலானுக்கு கிடைக்கவில்லை, வாழைக்கு கிடைக்கவில்லை என்றெல்லாம் நாம் குறை சொல்லக்கூடாது. மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் விருதுகளுக்காக திரைப்படம் எடுப்பவர்கள் கிடையாது. அவர்கள் தங்களது எண்ணங்களையும், சமூக கருத்துகளையும், கலை பார்வையையும் வெளிப்படுத்துவதற்காக படங்களை உருவாக்குகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். இயக்குநர் மிஷ்கினின் இந்த கருத்து, திரைப்பட உருவாக்கத்தின் நோக்கம் குறித்து ஒரு முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படம் உருவாகும்போது அதன் பின்னால் இருக்கும் கலைஞர்களின் உழைப்பு, அவர்களின் பார்வை மற்றும் சமூகத்தின் மீதான தாக்கம் ஆகியவையே முக்கியம் என்றும், விருதுகள் அதற்கான கூடுதல் பாராட்டாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய மிஷ்கின், விருது கிடைக்கும் போது அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள் என்றும், அதே நேரத்தில் விருது கிடைக்காததால் ஒரு படைப்பின் மதிப்பு குறைந்துவிடாது என்றும் கூறினார். "விருதுகள் கிடைக்கும்போது சந்தோஷப்படுவோம். நமக்கு கிடைக்கவில்லை என்றாலும், பக்கத்தில் இருக்கும் நமது சகோதரனுக்கு தானே கிடைக்கிறது. அது நமக்கும் மகிழ்ச்சிதான். சினிமா என்பது போட்டி மட்டுமல்ல; அது ஒரு கலை. மற்றொரு கலைஞன் வெற்றி பெறும்போது அதை கொண்டாட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    a-good-film-does-not-need-an-award-director-mysskin

    தனது சொந்த திரைப்படங்கள் குறித்து பேசிய மிஷ்கின், தான் ஒருபோதும் விருதுகளை குறிவைத்து படங்களை உருவாக்கியதில்லை என்று கூறினார். "நான் என்னுடைய எந்த படத்தையும் விருதுகளுக்காக அனுப்பியதே கிடையாது. இனிமேலும் அனுப்பமாட்டேன். ஒரு திரைப்படம் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், ஒரு இயக்குநருக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு எந்த விருதையும் விட உயர்ந்தது என்றும் அவர் கூறினார்.

    "மக்கள் நமது படத்தை டிக்கெட் வாங்கி பார்த்து, அதை வெற்றிப்படமாக ஆக்கிவிட்டார்கள் என்றால் அதைவிட பெரிய விருது என்ன இருக்கிறது?" என்று மிஷ்கின் கேள்வி எழுப்பினார். மிஷ்கினின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தி வருகின்றன. சிலர் அவரது கருத்தை வரவேற்று, திரைப்படத்தின் உண்மையான வெற்றி என்பது ரசிகர்களின் அங்கீகாரமே என்று கூறி வருகின்றனர். மற்றொரு தரப்பினர், தேசிய விருதுகள் போன்ற அங்கீகாரங்கள் கலைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பை கவுரவிக்கும் முக்கியமான நிகழ்வுகள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளையும், வித்தியாசமான திரைமொழியையும் கொண்டு படைப்புகளை உருவாக்கி வரும் மிஷ்கின், ஆரம்ப காலம் முதலே திரைப்படத்தை ஒரு கலை வடிவமாக அணுகி வருபவர். அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் மனித உணர்வுகள், சமூக பார்வை மற்றும் வாழ்க்கையின் சிக்கல்களை மையமாகக் கொண்டிருக்கும். அந்த வகையில், விருதுகள் குறித்து அவர் கூறியுள்ள கருத்தும் அவரது திரைப்பட பார்வையுடன் ஒத்துப்போகிறது என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். ஒரு படைப்பாளியின் மிகப்பெரிய வெற்றி என்பது பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிப்பது என்றும், விருதுகள் அதற்கான கூடுதல் மகிழ்ச்சி மட்டுமே என்றும் அவர் கூறியுள்ள கருத்து தற்போது கவனத்தை பெற்றுள்ளது.

    a-good-film-does-not-need-an-award-director-mysskin

    திரைப்பட உலகில் விருதுகள், வசூல், விமர்சனங்கள் என வெற்றியை அளவிட பல்வேறு அளவுகோல்கள் இருந்தாலும், மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பதே ஒரு திரைப்படத்தின் நீண்டகால வெற்றி என்பதை மிஷ்கினின் பேச்சு மீண்டும் நினைவூட்டியுள்ளது. அவரது இந்த கருத்துகள் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே விவாதிக்கப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: என் போட்டோவையா மார்பிங் செய்றீங்க..!! இனி ரூ.100 கோடி கொடுத்தாலும் இதை செய்யமாட்டேன் - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்..!

    மேலும் படிங்க
    இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு! அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்!

    இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு! அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்!

    தமிழ்நாடு
    ‘ஜன நாயகன்’  படம் முதல் நாள் பார்க்க முடியாது.. ஏன்னா நான் ரஜினி ரசிகன்..!! ரிலீஸுக்கு முன் அமைச்சர் அருண்ராஜின் பேச்சு வைரல்..!

    ‘ஜன நாயகன்’ படம் முதல் நாள் பார்க்க முடியாது.. ஏன்னா நான் ரஜினி ரசிகன்..!! ரிலீஸுக்கு முன் அமைச்சர் அருண்ராஜின் பேச்சு வைரல்..!

    சினிமா
    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! தமிழகத்தின் முக்கிய கோரிக்கை..! செவி சாய்க்குமா கர்நாடகா...?

    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! தமிழகத்தின் முக்கிய கோரிக்கை..! செவி சாய்க்குமா கர்நாடகா...?

    இந்தியா
    6 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா? தலைமை செயலகத்தில் சபாநாயகர் கொடுத்த வாக்குறுதி!

    6 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா? தலைமை செயலகத்தில் சபாநாயகர் கொடுத்த வாக்குறுதி!

    தமிழ்நாடு
    MLA மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி..! தலையில் இடியை இறக்கிய தூத்துக்குடி கோர்ட்..!!

    MLA மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி..! தலையில் இடியை இறக்கிய தூத்துக்குடி கோர்ட்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    இந்தியா

    செய்திகள்

    இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு! அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்!

    இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு! அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்!

    தமிழ்நாடு
    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! தமிழகத்தின் முக்கிய கோரிக்கை..! செவி சாய்க்குமா கர்நாடகா...?

    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! தமிழகத்தின் முக்கிய கோரிக்கை..! செவி சாய்க்குமா கர்நாடகா...?

    இந்தியா
    6 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா? தலைமை செயலகத்தில் சபாநாயகர் கொடுத்த வாக்குறுதி!

    6 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா? தலைமை செயலகத்தில் சபாநாயகர் கொடுத்த வாக்குறுதி!

    தமிழ்நாடு
    MLA மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி..! தலையில் இடியை இறக்கிய தூத்துக்குடி கோர்ட்..!!

    MLA மார்க்கண்டேயன் ஜாமின் மனு தள்ளுபடி..! தலையில் இடியை இறக்கிய தூத்துக்குடி கோர்ட்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

    இந்தியா
    15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!

    15 நாளில் இப்படியா..? அரிசி விலை உயர்வு... அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share