தமிழ் திரையுலகில் பல நடிகைகளின் புகழ், அவர்களது நடிப்பு திறன் மற்றும் தனித்துவமான தோற்றத்தால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக, மிருணாள் தாகூர் தனது தனித்துவமான ஸ்டைல், நடிப்பு திறன் மற்றும் சமூக வலைதள நிகழ்வுகளால் தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய டிரெண்டாக மாறியுள்ளார்.
இதையும் படிங்க: உலகமே எதிர்பார்த்த ராஷ்மிக்கா - விஜய்தேவர்கொண்டா திருமணம்..! அரண்மனையில் கிராண்டாக நடைபெறவுள்ளதாக தகவல்..!

கடந்த சில மாதங்களாக, அவரும் நடிகர் தனுஷுடன் தொடர்பு உள்ளதாக ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல்கள், சில குரூப் பேச்சுக்கள் மற்றும் மீம்ஸ் வழியாக, ரசிகர்களிடையே விரைவில் பரவியது.

இதற்கிடையில், நடிகை மிருணாள் தாகூர் தன்னுடைய சமூக வலைதள கணக்குகளின் மூலம் இதெல்லாம் வதந்தி மற்றும் தவறான செய்திகள் என தெளிவாக அறிவித்து வந்தார்.

அவர் தனக்கு நேர்மையாகவும், தனிப்பட்ட வாழ்க்கை மீது தனக்கே உரிய உரிமை இருப்பதாக கூறி, இந்த பேச்சுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் மிருணாள் தாகூர் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் வைத்துள்ளன.

இவரது சமீபத்திய பதிவில், அவர் ஆரஞ்சு நிற மாடர்ன் உடையில் கெளரவமான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியானதும், ரசிகர்கள் விரைவில் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, லைக் மற்றும் கமெண்ட் போட்டியில் பங்கேற்று வருகிறார்கள்.
இதையும் படிங்க: நீங்க வேணா பாருங்கா.. கண்டிப்பா 'with love' படம் ஹிட் அடிக்கும்..! நடிகர் மணிகண்டன் மாஸ் ஸ்பீச்..!