தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருக்கின்றனர் அதில் சுந்தர் சி, சங்கர், பி.வாசு, மணிரத்தினம் என பலர் இருந்தாலும் அவர்கள் மத்தியில் இன்றும் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் தான் ஏ.ஆர்.முருகதாஸ்.

இவரது திரைப்படங்கள் அனைத்தையும் எடுத்து பார்த்தால் சற்று வித்தியாசமாகவே இருக்கும் குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று வந்த பொழுது இவரது பெயர்தான் மக்கள் மனதில் அதிகமாக இடம் பிடித்தது. அதற்கு காரணம் அவர் இயக்கிய 'ஏழாம் அறிவு' திரைப்படம் தான். அந்த படத்தில் டாங்கிலி என்ற கேரக்டரை வைத்து சீனாவில் இருந்து பையோ வார் வரும் வகையில் மோசமான வைரஸ் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவதாகவும் போதி தர்மன் என்று ஒருவர் இங்கு வாழ்ந்ததாகவும் அவர் சீனாவுக்கு சென்று பல நற்காரியங்களை செய்திருப்பதாகவும் உண்மையில் நம் அனைவருக்கும் தற்காப்பு கலை என்பது தெரிய வேண்டும் என்பதை உணர்த்திய படமாக அத்திரைப்படம் இருந்தது. அந்த 'ஏழாம் அறிவு' திரைப்படத்தில் வந்ததைப் போலவே கொரோனா பெருந்தொற்று வந்ததினால் எப்படி ஏ.ஆர்.முருகதாசஸ்க்கு இந்த ரகசியங்கள் அனைத்தும் தெரிந்தது என அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா, சமந்தா..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

இப்படிப்பட்ட ஏ ஆர் முருகதாஸை குறித்து பார்ப்போமேயானால் இவரது எல்லா திரைப்படங்களிலும் அவரது ஊரின் பெயரை கண்டிப்பாக இடம் பெற செய்து இருப்பார். அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் பிறந்த இவர், திருச்சி பிஷப் காலேஜில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே தமிழ் சினிமா துறையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். அதனாலேயே காலேஜில் நடைபெறும் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு நடிப்பது, பல நடிகர்களின் குரல்களை எடுத்துப் பேசுவது என பல திறமைகளை வெளிப்படுத்தி இருப்பார். அதுமட்டுமல்லாமல் பள்ளி நாட்களில் சிறுகதைகள் மற்றும் நாவல்கள் என பலவற்றை எழுதி பத்திரமாக வைத்திருக்கிறார்.

இவரது எழுத்து திறமைகளை கண்டு ஆச்சரியப்பட்ட அவரது நண்பர்கள் அவரை உற்சாகப்படுத்தியதால் தனது முதல் அடியை சினிமாவில் எழுத்தாளராக வைத்தார். அதன்படி கலைமணியிடமிருந்து எழுத்தாளராக ஆரம்பித்த இவரது பயணம், அதனைத் தொடர்ந்து 'பூச்சூடவா' என்ற திரைப்படத்தில் அவரை நடிக்கவும் செய்தது.. இதனை அடுத்து எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி மற்றும் குஷி ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி சினிமாவில் தன்னை பெரிய இயக்குனராக மாற்றிக்கொள்ள வழிவகை செய்தார். இதனை அடுத்து தான் 2001 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தை வைத்து 'தீனா' என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் தனது பெயரை நிலை நாட்டினார். அதன்படி இதுவரை தமிழில் மட்டும் தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, 10 எண்றதுக்குள்ள, ஸ்பைடர், சர்க்கார், தர்பார், ராங்கி, ஆகஸ்ட் 16 1947 உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

தற்பொழுது ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் "மதராஸி". இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் இந்த வேளையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில், சூர்யாவின் நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தின் 'கனிமா' பாடலுக்கு தனது மகன், மகள் மற்றும் மனைவியுடன் நடனமாடி இருக்கிறார்.

இந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின் 'குபேரா' பட இயக்குனர் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்..!