• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, December 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கு..! தாயின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு..!

    நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் தாயின் ஆட்கொணர்வு மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தனர்.
    Author By Bala Sat, 20 Dec 2025 12:34:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-gold-smuggling-case-actress-ranya-raos-mothers-habeas-corpus-petition-dismissed-high-court-issues-a-strong-order-tamilcinema

    துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ் தொடர்பான வழக்கு, கர்நாடகாவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாக மாறியுள்ளது. சினிமா பின்னணியைக் கொண்ட ஒருவர், இவ்வளவு பெரிய அளவிலான தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்த வழக்கின் விசாரணை தற்போது பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த சமீபத்திய உத்தரவு, வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் துபாயிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் வந்த நடிகை ரன்யா ராவை, டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (Directorate of Revenue Intelligence – DRI) அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 14 கிலோ எடையுள்ள தங்கம் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ரன்யா ராவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் நடிகை ரன்யா ராவ் மட்டும் அல்லாமல், அவரது காதலன் என கூறப்படும் தருண் என்பவர் உட்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்ற காவலில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில், ரன்யா ராவ் தனிப்பட்ட முறையிலும், ஒரு திட்டமிட்ட வலையமைப்பின் ஒரு பகுதியாகவும் செயல்பட்டு, துபாயிலிருந்து இந்தியாவுக்கு மொத்தமாக 127 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வெளியானது ரச்சிதா மகாலட்சுமியின் 99/66 ஹாரர் படத்தின் பர்ஸ்ட் லுக்..!

    actress ranya raos

    இந்த குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், அது இந்திய வரலாற்றில் மிகப் பெரிய தங்கக் கடத்தல் வழக்குகளில் ஒன்றாக கருதப்படும் என சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில், நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அபராதம் மட்டுமின்றி, அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், நடிகை ரன்யா ராவின் கைது மற்றும் அவர்மீது பதியப்பட்ட வழக்கு சட்டவிரோதமானது என கூறி, அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, அவரது தாய் ரோகினி மற்றும் தருணின் தாய் ரமா ராஜு ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்களில், ரன்யா ராவ் மற்றும் தருண் ஆகியோர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைத்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனு சிவகுமார் மற்றும் விஜய்குமார் ஏ. பட்டீல் அமர்வில் நடைபெற்றது. விசாரணையின் போது, ரன்யா ராவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது நடவடிக்கையின் போது சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்று வாதிட்டார்.

    விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது, ரன்யா ராவ் தன்னைச் சுற்றிய நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்ய முயன்றதாகவும், அதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், ரன்யா ராவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கான உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதனால், அவரது கைது சட்டவிரோதமானது என்றும், எனவே அவர் மீது பதிவான வழக்கை ரத்து செய்வதோடு, அவரது கைது நடவடிக்கைக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் ரன்யா ராவ் தரப்பின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதேபோல், தருணின் தாய் ரமா ராஜு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், தனது மகனின் கைது சட்டவிரோதமானது என்று வாதிட்டார்.

    actress ranya raos

    இதற்கு பதிலளித்து, மத்திய அரசு மற்றும் வருவாய் நுண்ணறிவு பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரன்யா ராவ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். ரன்யா ராவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், விசாரணை வீடியோ காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் முறையாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வீடியோ காட்சிகள் அடங்கிய பென் டிரைவ் ஒன்றை அவருக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், இந்த வழக்கில் ரன்யா ராவ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபணமாகி இருப்பதாகவும், அதனால் இந்த வழக்கை ரத்து செய்ய எந்த சட்டப்பூர்வ காரணமும் இல்லை என்றும் மத்திய அரசு தரப்பு வாதிட்டது. குறிப்பாக, ரன்யா ராவ் மற்றும் தருண் மீது ‘காபிபோசா’ எனப்படும் கடுமையான தடுப்பு காவல் சட்டம் அமலில் இருப்பதாகவும், இந்த சட்டத்தின் கீழ், அவர்கள் ஜாமீன் பெற்றாலும் ஒரு ஆண்டுக்காலம் சிறையிலிருந்து வெளியே வர முடியாது என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனவே, இந்த ஆட்கொணர்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அரசு தரப்பு வலியுறுத்தியது.

    இருதரப்பு வாதங்களையும் விரிவாக கேட்ட நீதிபதிகள், வழக்கின் தன்மை, குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் அதிகாரிகள் சமர்ப்பித்த ஆதாரங்களை கருத்தில் கொண்டு, நடிகை ரன்யா ராவ் மற்றும் தருண் ஆகியோரின் ஆட்கொணர்வு மனுக்களை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவின் மூலம், அவர்களின் கைது சட்டவிரோதமானது என்ற குற்றச்சாட்டு ஏற்கப்படவில்லை. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, தங்கக் கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு ஏற்பட்ட சட்ட நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

    actress ranya raos

    ஒருகாலத்தில் திரையுலகில் அறிமுகமாகி கவனம் பெற்ற நடிகை, இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கி, கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவது, அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு எவ்வாறு நகரும் என்பதும், நடிகை ரன்யா ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எந்த முடிவை அடையும் என்பதும் தான், சட்ட வட்டாரங்களும் பொதுமக்களும் ஆவலுடன் கவனித்து வரும் முக்கிய விஷயமாக உள்ளது.

    இதையும் படிங்க: தொழில் அதிபருடன் ரகசிய டேட்டிங்..! வசமாக சிக்கிய நடிகை கீர்த்தி சனோன்..!

    மேலும் படிங்க
    அவருக்கும் எனக்குமான நட்பு எப்படிப்பட்டது தெரியுமா..? கலங்கியபடி நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!

    அவருக்கும் எனக்குமான நட்பு எப்படிப்பட்டது தெரியுமா..? கலங்கியபடி நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!

    சினிமா
    விண்ணைப் பிளந்த “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்” முழக்கம்- திடீரென சிதறிய ஓடிய வடமாநில கும்பல்... ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு...!

    விண்ணைப் பிளந்த “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்” முழக்கம்- திடீரென சிதறிய ஓடிய வடமாநில கும்பல்... ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    வேலை வேணும்-னா இப்படி செய்ய சொல்லுறாங்க..! பரபரப்பான ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி..!

    வேலை வேணும்-னா இப்படி செய்ய சொல்லுறாங்க..! பரபரப்பான ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி டிடி..!

    சினிமா
    நெல்லையில் முதல்வர்... மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு... செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்...!

    நெல்லையில் முதல்வர்... மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு... செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    “நாகூர் ஹனிபாவின் குரல் காற்றில் கலந்திருக்கும் வரை”... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

    “நாகூர் ஹனிபாவின் குரல் காற்றில் கலந்திருக்கும் வரை”... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்

    'A MAN WITH A HEART'..!! ஹர்திக் பாண்டியாவின் அதிரடி மற்றும் மனிதநேயம்..!! ஐஸ்-பேக் வைத்து கேமராமேனை நெகிழ வைத்த சம்பவம்..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    விண்ணைப் பிளந்த “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்” முழக்கம்- திடீரென சிதறிய ஓடிய வடமாநில கும்பல்... ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு...!

    விண்ணைப் பிளந்த “சத்ரபதி சிவாஜி சிந்தாபாத்” முழக்கம்- திடீரென சிதறிய ஓடிய வடமாநில கும்பல்... ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    நெல்லையில் முதல்வர்... மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு... செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்...!

    நெல்லையில் முதல்வர்... மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு... செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    “நாகூர் ஹனிபாவின் குரல் காற்றில் கலந்திருக்கும் வரை”... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

    “நாகூர் ஹனிபாவின் குரல் காற்றில் கலந்திருக்கும் வரை”... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    “புறமுதுகிட்டு ஓடுன விஜய் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது”... அமைச்சர் ரகுபதி காட்டம்...!

    “புறமுதுகிட்டு ஓடுன விஜய் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது”... அமைச்சர் ரகுபதி காட்டம்...!

    அரசியல்
    முதல்வர் தலைமையில் நாளை திமுக ஆலோசனைக் கூட்டம்... முக்கிய அறிவிப்பு...!

    முதல்வர் தலைமையில் நாளை திமுக ஆலோசனைக் கூட்டம்... முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    X தளத்தில் Top 10 இடத்தில் மோடி..!! அட..!! இந்த ஃபோட்டோவுக்கு இவ்ளோ லைக்ஸ்-ஆ..!!

    X தளத்தில் Top 10 இடத்தில் மோடி..!! அட..!! இந்த ஃபோட்டோவுக்கு இவ்ளோ லைக்ஸ்-ஆ..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share