இந்திய தொலைக்காட்சி உலகில் பாம்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற தொடர்களில் ஒன்று நாகின்.

சாதாரணமாக பாம்பு என்றாலே பயம், அச்சம் என்ற மனநிலையே பெரும்பாலானோரிடம் இருக்கும் நிலையில், இந்த தொடரின் கதை அந்த பார்வையை முற்றிலும் மாற்றியது.

அதிசய சக்திகள் கொண்ட நாகினி கதாபாத்திரம், காதல், பழிவாங்கல், மாய உலகம் ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்ட இந்த தொடர் இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படிங்க: முதல்ல இந்த ஜெனரேஷன்.. பிள்ளைகள வளர்க்க கத்துக்கோங்க..! நடிகர் மாதவன் சொன்ன அட்வைஸ்..!

இந்த தொடரின் முதல் சீசனில் நாகினியாக நடித்தவர் மௌனி ராய். அவரது நடிப்பு, திரை வெளிப்பாடு மற்றும் கதாபாத்திரத்தில் அவர் காட்டிய தீவிரம் ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

குறிப்பாக ஒரு சாதாரண தொலைக்காட்சி தொடராக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, பின்னர் தேசிய அளவில் பேசப்படும் அளவுக்கு உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மௌனி ராய் என்றே கூறப்படுகிறது.

மௌனி ராய் நடித்த நாகினி கதாபாத்திரம், ஒரு பாம்பின் வடிவத்தில் இருந்து மனித வடிவமாக மாறி தனது காதல் மற்றும் பழிவாங்கல் கதையை முன்னெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிகள், உடல்மொழி மற்றும் கண் அசைவுகள் பார்வையாளர்களை கட்டிப்போட்டன.

இதனால், தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த தொடரின் வெற்றிக்குப் பிறகு பல சீசன்கள் உருவாக்கப்பட்டன.
இதையும் படிங்க: காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் நடிக்க உள்ள புதிய படம்..!! மாஸான டைட்டிலை வெளியிட்ட படக்குழு..!