தமிழ் திரையுலகில் தனது ஐடி வேலையை விட்டு, படம் எடுக்க நினைத்து, "ஷார்ட் பிலிம்ஸ்" மூலமாக தனக்கான பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்து, பின் ரவி மோகனை வைத்து, 90ஸ் காலத்து நினைவுகளையும், 90ஸ் காதலையும், அப்பொழுது உள்ள விளையாட்டையும், பீலிங்ஸையும் கலந்து மிகவும் நகைச்சுவையாகவும் சிந்திக்க வைக்கும் விதத்திலும் "கோமாளி" என்ற படத்தை மக்களுக்கு கொடுத்து, பலரது பாராட்டையும் பெற்றவர் இயக்குநர் "பிரதீப் ரங்கநாதன்".

இப்படம் வெற்றியை தொடர்ந்து, தானே ஹீரோவாக நடிக்க தயாராகி அவரது இரண்டாவது படத்திற்கான கதைகளை முடித்துவிட்டு அதற்கான நடிகையை தேடிய பொழுது, பிரதீப் நடிக்கிறார் என தெரிந்தவுடன் பல ஹீரோயின்கள் இந்த படத்தில் நடிக்க மறுத்து சென்றனர். ஆனால் அதற்காக வருத்தப்படாமல் தனது முழு நம்பிக்கையையும் தன் உழைப்பின் மீது வைத்து பயணம் செய்த பிரதீப்புக்கு, இவனா என்பவர் நடிகையாக கிடைக்க, சிறப்பாக படத்தை இயக்கி வெளியிட்டார், இத்தனை வேதனைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் இந்தியா முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
இதையும் படிங்க: 100வது நாளை கடந்து வெற்றி கொண்டாட்டத்தில் "டிராகன்"..! தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த மாஸ் கிப்ட்..!

இதனை அடுத்து பிரதீப் என்ன படம் எடுப்பார் என ரசிகர்கள் காத்து கொண்டிருக்க ஒரு நாள் "பல நாள் போட்டோ நினைவு சாலஞ்சை" நினைவு வைத்து, பத்து வருடத்திற்கு முன் அவரது சீனியரும் அவரும் பேசிக்கொண்ட "மச்சா நேர்ல பாக்கத்தான் ஒரு மாதிரி இருக்க ஆனா ஃபிரேம்ல சூப்பரா இருக்க " என்ற அந்த பதிவை நினைவு செய்து படத்திற்கான முதல் இன்றோ வீடியோவை வெளியிட்டனர். இதனை அடுத்து படத்தின் பெயர் என்ன என குழம்பி போய் இருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெயர் "டிராகன்" என டீசர் மூலமாக கூறி படத்திற்கான ஹைப்பை ஏற்றினர். பின் ஒருவழியாக இரண்டு ஹீரோயினுடனும், விஜே சித்து, ஹர்ஷத்கான் முதலியானோருடன் பிரதீப் நடித்த டிராகன் படம் பிப்ரவரி மாதம் வெளியாகி தற்பொழுது மெகா ஹிட் அடித்துள்ளது.

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனுடன் நடிக்க நடிகைகள் மறுத்த காலம் மாறி போய், தற்பொழுது அவருடன் நடிக்க பல நடிகைகள் நடிக்க தயாராகி இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது பிரதீப் நடிக்க இருக்கும் படத்தில் அவருடன் மூன்று நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்,சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இந்த சூழலில் டிராகன் படத்தின் 100 வது நாள் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி கோலாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்பொழுது நடிகர் பிரதீப் ரங்கநாதன் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டார்.

இதனை அடுத்து பேசிய நடிகர் பிரதீப் ரங்கநாதன், " எனக்கும், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கும் இடையே பல ஆண்டுகள் நட்பு ரீதியான பழக்கம் உள்ளது. அவர் "ஓ மை கடவுளே" படம் இயக்கும் போதே அதில் எனக்கு சின்ன ரோல் தருகிறேன் என சொன்னார். ஆனால், நானோ அமெரிக்க மாப்பிள்ளை நான் ஆதலால் வில்லன் ரோல் எப்பொழுதும் பண்ண மாட்டேன். நான் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் இல்லையெனில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். அதற்கான முயற்சிகளில் மிகவும் தீவிரமாக இறங்கினேன். நான் இயக்கிய கோமாளி படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அடுத்து நான் இயக்கி நடித்த "லவ் டுடே" அதைவிட ஹிட் ஆன பின்புதான், நானும், அஷ்வத்தும் இணைந்து இந்த "டிராகன்" படத்தை உருவாக்கினோம்.

இந்த படமும் எதிர்பாராத வகையில் ஹிட் கொடுத்துள்ளது. நான் பங்குபெற்ற கோமாளி, லவ்டுடே, டிராகன் என அனைத்து படங்களும் 100வது நாளை கொண்டாடி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியோடு இந்த படக்குழுவுக்கும், எனக்குமான உறவு முடிவடைகிறது. அடுத்து ஏதாவது விருது வழங்கும் விழாவில் நாங்கள் சந்திக்கலாம் வாய்ப்பு இருந்தால் சொல்கிறேன்' என்றார்.

இதனை பார்த்த பலரும் கண்டிப்பாக அவர் சொன்னது போல உழைச்சா நம்பிக்கை வச்சா லைஃப் மாறிடும் போலத்தான் என பேசிவிட்டு சென்றனர்.
இதையும் படிங்க: நடிகர் சூர்யாவுடன் ஹனிமூன் பிசியில் ஜோதிகா..! இளமையை கழிக்க சென்றுள்ள இடத்தை பாருங்க..!