இன்று ஹீரோயின்களில் "லேடி சூப்பர் ஸ்டார்" நான் தான்...இல்லை நான் தான்...என சண்டையிட்டு வலம் வருபவர்கள் மத்தியில் இன்றும் தொகுப்பாளர்களில் 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆக இருப்பவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. இப்படி பார்க்க அழகாகவும் கொழு கொழு கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் சிங்கர், டான்ஸ் நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தன் கையில் வைத்து அசத்தி வருகிறார்.

இப்படி இருக்க, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தனி ஒரு ஆளாக நின்று நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கொண்டு செல்வதில் வல்லவர். ஆனால் இவரது திறமையை மற்றொருவருடன் சேர்த்து பகிர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த நிகழ்ச்சி இயக்குனர், அவருடன் மாகாபா ஆனந்தை சேர்த்து எல்லா நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்க விட, ஷோக்கள் ஹிட் ஆனது. இன்று இவர்கள் இருவரது புகழ், பல பிரபலங்கள் மத்தியில் கொடிகட்டி பறந்து வருகின்றது.
இதையும் படிங்க: மம்முட்டியான் பாடலை யாரை கேட்டு பயன்படுத்தினீங்க.. டூரிஸ்ட் ஃபேமிலியில் வந்த பாடலுக்கு தியாகராஜன் ரியாக்ஷன்..!

இதனை அடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி போர் அடித்துப் போன பிரியங்கா.. அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். ஆனால் அவர் களம் இறங்கிய பின்பு போட்டியில் விறுவிறுப்பு ஒரு பக்கம் அதிகரிக்க மறுபக்கம் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியான மணிமேகலைக்கும் அவருக்கும் இடையே யார் மிகப்பெரிய தொகுப்பாளினி என்ற சண்டை ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் விட்டுக் கொடுத்து சென்ற மணிமேகலை ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து பிரியங்காவிற்கு எதிராக வீடியோ ஒன்றை பதிவிட்டு பிரியங்காவின் மொத்த இமேஜையும் காலி செய்தார். தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் பல பேருடைய வாழ்க்கையே பிரியங்கா அழித்து வருவதாகவும் அவர் கூற, அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

பின் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அளவிற்கு பிரியங்காவின் பெயர் செய்திகளிலும் இணையதளங்களிலும் ட்ரெண்ட் ஆனது. இதனைத் தொடர்ந்து பிரியங்காவிற்கு ஆதரவாக பல நட்சத்திரங்கள் தங்களது பதிவுகளை இணையதளத்தில் பதிவிட்டு வந்தனர். பின்பு இந்த பிரச்சனை இருக்கும் இடம் தெரியாதபடி மறைந்து போக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா தான் ஜெயித்தார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் பெரும்பாலும் எந்த ரசிகர்களுக்கும் விருப்பமில்லை என்றே கூறலாம்.

இப்படிப்பட்ட தான சூழலில் நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த தொகுப்பாளனி பிரியங்கா, திடீரெனஒரு நாள் பிஸ்னஸ் மேன் வசி என்பவருடன் ரகசிய திருமணம் செய்துகொண்டார். பின் பாவனி கல்யாணத்திற்கு தனது புது கணவருடன் சென்ற பிரியங்கா, அதற்கு பிறகு ஹனிமூனில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் கல்யாணத்திற்கு பிறகு வாழ்க்கை ஜாலியாக உள்ளது என தெரிவித்து இருந்தார். இப்படி அவர் மகிழ்ச்சியாக இருப்பதில் யார் கண்பட்டதோ தெரியவில்லை, சமீபத்தில் பிரியங்காவின் காலில் பலமாக அடிபட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்ட்டாகிராம் மூலமாக தெரிவித்த பிரியங்கா, காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்திற்கு கீழ் Fracture said pause, I said POSE! என பதிவிட்டு இருந்தார்.

இப்படி இருக்க, தற்பொழுது மீண்டுமாக தனது இன்ஸ்ட்டாகிராமில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியங்கா, அதில் தனது தம்பி மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பதிவிட்டு, தனது மருமகளுக்கு 3 வயது ஆகிவிட்டது. அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தெரிவித்து கொள்வதாக கூறி போஸ்ட் போட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் அக்குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே வருடத்தில் இத்தனை சோதனையா.. விபத்தில் தந்தையை பறிகொடுத்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ..!