• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரோகிணிக்கு ஆதரவாக களமிறங்கிய மீனா, ஸ்ருதி..!! மனோஜுக்கு எதிராக முத்து எடுக்கப் போகும் அதிரடி முடிவு.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சிறகடிக்க ஆசையில் இன்று பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
    Author By Bala Wed, 26 Aug 2026 11:20:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-siragadikka-aasai-serial-today-august-26th-episode-meena-and-sruthi-supports-rohini-what-happened-next-drawback-for-manoj-anu-tamilcinema

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடரான ‘சிறகடிக்க ஆசை’ நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. முத்து – மீனா வாழ்க்கையை மையமாக வைத்து நகர்ந்து வரும் இந்தத் தொடரில், குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள், காதல், பாசம், ஏமாற்றம் என பல்வேறு உணர்வுகள் கலந்து கதைக்களம் நகர்ந்து வருகிறது. குறிப்பாக ரோகிணியை சுற்றி தற்போது உருவாகியுள்ள பிரச்சனை, அடுத்தடுத்த எபிசோடுகளில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

    ஒருபுறம் சத்யாவை வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்க வேண்டும் என்ற முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் ரோகிணியின் கர்ப்ப விவகாரம் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே ரோகிணிக்கு ஆதரவாக மீனா மற்றும் ஸ்ருதி களமிறங்குவது தற்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இன்றைய எபிசோடில் ரேகாவின் தந்தை வீட்டிற்கு வருவதுடன் முக்கியமான சம்பவங்கள் தொடங்குகின்றன. சத்யாவை எப்படியாவது இந்த வீட்டிலேயே தங்க வைத்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பது போல காட்சிகள் அமைகின்றன.

    உடல்நிலை ஓரளவுக்கு சரியாகிவிட்டதாக கூறும் அவர், சத்யாவிடம் மிகவும் பாசமாக பேசுகிறார். “நீங்கள் இல்லை என்றால் என்னால் இப்படி நிம்மதியாக இருக்க முடியாது” என்ற வகையில் சத்யாவிடம் நல்லவிதமாக பேசுகிறார். இதனால் சத்யாவுக்கும் அவரது பேச்சு மனதில் பதிகிறது. தொடர்ந்து, சத்யாவுக்கும் ரேகாவுக்கும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வைத்து, ஊரறிய அவர்களது உறவை அறிவித்துவிட்டால் தங்களுக்கும் நிம்மதியாக இருக்கும் என ரேகாவின் தந்தை தெரிவிக்கிறார். இதற்கு சத்யா பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், “எல்லாம் உங்க இஷ்டம் ஆண்டி” என்று கூறுகிறார்.

    இதையும் படிங்க: வயிற்றுல வளர குழந்தைக்காவது அப்பா இருக்காரா..!! கேள்வியால் திணறடித்த கிரிஷ்.. அதிர்ந்து போன ரோகிணி - சிறகடிக்க ஆசையில் இன்று..!

    siragadikka-aasai-serial

    இந்த பதில் அங்கிருந்தவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சத்யா இந்த வீட்டை விட்டு சென்றுவிடக்கூடாது என்பதில் ஆர்வமாக இருக்கும் சிந்தாமணி, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்கிறார். சத்யா வீட்டில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என திட்டமிடப்படுகிறது. சாதாரணமாக ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்கு பதிலாக, நிறைய விஐபிகளை அழைத்து சத்யாவுக்கு ஆசை காட்டி அவரை இந்த வீட்டிலேயே இருக்க வைக்க வேண்டும் என்பதே திட்டமாக உள்ளது. இதனால் வீட்டில் மீண்டும் ஒரு புதிய பரபரப்பு உருவாகிறது.

    சத்யா உண்மையிலேயே இந்த குடும்பத்துடன் இணைந்து விடுவாரா? திருமண வரவேற்பு என்ற பெயரில் நடக்கப்போகும் நிகழ்ச்சியில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படப் போகின்றன? என்பதுதான் இனிவரும் எபிசோடுகளில் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. ஆனால் இதற்கிடையே கதையின் முக்கிய கவனம் ரோகிணி பக்கம் திரும்புகிறது. தொடர்ந்து ஸ்ருதி ஹோட்டலில் இருக்கும் நிலையில், அங்கு மீனாவையும் ஸ்ருதியையும் சந்திக்க வித்யா வருகிறார். அப்போது ரோகிணியின் தற்போதைய நிலைமை குறித்து அவர் பேசுகிறார். குறிப்பாக, மனோஜ் கருவை கலைக்கச் சொல்லி ரோகிணிக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருவதாகவும், ரோகிணி பாவம் என்றும் வித்யா கூறுகிறார். இந்த தகவலை கேட்டதும் மீனா மற்றும் ஸ்ருதி இருவருமே அதிர்ச்சி அடைகின்றனர்.

    ரோகிணி இதற்கு முன்பு பல தவறுகளை செய்திருந்தாலும், அவளுடைய தற்போதைய நிலையை பார்த்து அவர்களுக்கு பரிதாபம் ஏற்படுகிறது. குறிப்பாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கருவை கலைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது சரியல்ல என்ற எண்ணம் அவர்களுக்குள் உருவாகிறது. வித்யா கூறிய விஷயங்களை கேட்ட மீனா மற்றும் ஸ்ருதி, ரோகிணியின் நிலை குறித்து மனம் கலங்குகின்றனர். “என்னதான் ரோகிணி தப்பு பண்ணினாலும், மனோஜுக்கு துரோகம் நினைக்கமாட்டா. நம்ம நிச்சயம் ஏதாச்சு செய்யலாம்” என்ற முடிவுக்கு அவர்கள் வருகின்றனர். இதுதான் தற்போது கதையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாக பார்க்கப்படுகிறது. இதுவரை ரோகிணி செய்த தவறுகளால் அவளிடம் கோபமாக இருந்த மீனா, இப்போது அவளது கர்ப்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்குகிறார். ஸ்ருதியும் அதற்கு ஆதரவாக நிற்கிறார்.

    இருவரின் இந்த முடிவு ரசிகர்களிடையே முக்கியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில், நடந்த விஷயங்களை முத்துவிடமும் ரவியிடமும் மீனாவும் ஸ்ருதியும் தெரிவிக்கின்றனர். ரோகிணிக்கு மனோஜ் கொடுத்து வரும் அழுத்தம் குறித்து கேட்டதும் முத்துவுக்கு கடும் கோபம் வருகிறது. வழக்கம்போல் உணர்ச்சிவசப்படும் முத்து, உடனடியாக அப்பாவிடம் சென்று இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என முடிவு செய்கிறார். மனோஜ் ஒரு பெண்ணை கருவை கலைக்கச் சொல்லி வற்புறுத்துகிறான் என்ற விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய வேண்டும் என்பதே முத்துவின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் அங்கேதான் மீனா முக்கியமான ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டுகிறார். முத்து உடனடியாக அப்பாவிடம் சொல்ல புறப்படும்போது, மீனா அவரை தடுக்கிறார்.

    siragadikka-aasai-serial

    இந்த விஷயத்தை இப்போது குடும்பத்தினரிடம் சொன்னால், அவர்கள் உடனடியாக மனோஜை அழைத்து திட்டுவார்கள். அதன் பிறகு நிலைமை மோசமாகிவிடும் என மீனா கூறுகிறார். அதுமட்டுமல்லாமல், மனோஜ் ஏன் கருவை கலைக்கச் சொல்கிறான் என்பதற்கான காரணத்தையும் மீனா யூகிக்கிறார். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் உண்மை தெரிந்துவிடும் என்ற பயத்தில்தான் மனோஜ் இப்படி செய்கிறான் என அவர் கூறுகிறார். இதனால் உடனடியாக மனோஜிடம் சண்டை போடுவதைவிட, அவர் மறைத்து வைத்திருக்கும் உண்மையை எப்படி வெளியில் கொண்டு வருவது என்பதை யோசிக்க வேண்டும் என்று மீனா அறிவுறுத்துகிறார்.

    இந்த கருத்துக்கு மற்றவர்களும் உடன்படுகின்றனர். இதுவரை குடும்ப பிரச்சனைகளில் வெவ்வேறு விதமாக செயல்பட்டு வந்தவர்கள், இப்போது ரோகிணியின் கர்ப்ப விவகாரத்தில் ஒரே அணியாக நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. ரோகிணி செய்த தவறுகள் ஒருபுறம் இருந்தாலும், அவள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவளை கட்டாயப்படுத்தி கருவை கலைக்கச் சொல்வது தவறு என்ற முடிவுக்கு மீனா, ஸ்ருதி மற்றும் முத்து வருகின்றனர். அதேநேரம், ரோகிணி மீது முழுமையாக நம்பிக்கை வைக்க முடியுமா என்பதும் அவர்களுக்கு தெரியும். எனவே உண்மையை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கிறது.

    இதனால் மனோஜின் திட்டத்தை முறியடிக்க அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே நாளைய எபிசோடுக்கான புரோமோவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரோகிணியை பார்க்க மீனா செல்கிறார். கர்ப்பமாக இருக்கும் ரோகிணிக்கு உணவு மற்றும் உடல்நலம் தொடர்பாக அக்கறையுடன் பேசும் மீனா, கர்ப்ப காலத்தில் அவகேடோ சாப்பிட்டால் நல்லது என்று கூறுகிறார். ரோகிணியின் நிலையை பார்த்து மீனாவுக்கு பரிதாபம் ஏற்படுவது போல காட்சிகள் அமைந்துள்ளன. அப்போது ரோகிணியும் கருவை கலைக்கச் சொல்லி மனோஜ் கொடுக்கும் அழுத்தம் குறித்து பேசுகிறார். இதையடுத்து அங்கு இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்துகின்றனர்.

    இதன் மூலம் ரோகிணியை காப்பாற்றுவதற்கான புதிய திட்டம் உருவாகப் போகிறது என்பது தெளிவாகிறது. தற்போது ‘சிறகடிக்க ஆசை’ கதையில் இரண்டு முக்கியமான டிராக்குகள் ஒரே நேரத்தில் நகர்கின்றன. ஒருபுறம் சத்யாவை வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாகி வருகின்றன. திருமண வரவேற்பு நடத்தி, விஐபிகளை அழைத்து சத்யாவை வீட்டோடு இணைத்துவிடும் திட்டம் உருவாகியுள்ளது. மறுபுறம் ரோகிணியின் கர்ப்பம் மற்றும் மனோஜின் நடவடிக்கைகள் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. முக்கியமாக, டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உண்மை வெளிவந்துவிடும் என்ற பயத்தால்தான் மனோஜ் கருவை கலைக்க முயற்சிக்கிறானா? என்ற கேள்வி தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

    siragadikka-aasai-serial

    மீனா இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளதால், இதுவரை ரோகிணி மறைத்து வைத்திருந்த பல உண்மைகள் வெளியில் வருவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. இனி ரோகிணியின் கர்ப்பத்தை மீனா, முத்து மற்றும் ஸ்ருதி எப்படி காப்பாற்றப் போகிறார்கள்? மனோஜின் உண்மையான நோக்கம் என்ன? டிஎன்ஏ டெஸ்ட் நடைபெறுமா? ரோகிணி இதுவரை மறைத்த உண்மை குடும்பத்தினருக்கு தெரியுமா? அதே நேரத்தில் சத்யாவை வீட்டில் தங்க வைக்க நினைக்கும் திட்டம் வெற்றி பெறுமா? இந்த கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்ள அடுத்தடுத்த ‘சிறகடிக்க ஆசை’ எபிசோடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: சீதாவை தொட்ட நீ கெட்ட.. அருணை வெளுத்து வாங்கிய முத்து..!! கனகா அம்மாவை ஏமாற்றும் மனோஜ் - சிறகடிக்க ஆசையில் இன்று..!

    மேலும் படிங்க
    பிகினி போட்டு தான் அண்ணனுக்கு ராக்கி காட்டுவீங்களா..!! கங்கனா ரனாவத் vs க்ரிதி சனோன்.. சர்ச்சை கிளப்பிய ஆடை விவகாரம்..!

    பிகினி போட்டு தான் அண்ணனுக்கு ராக்கி காட்டுவீங்களா..!! கங்கனா ரனாவத் vs க்ரிதி சனோன்.. சர்ச்சை கிளப்பிய ஆடை விவகாரம்..!

    சினிமா
    டபுள் டமாக்கா..! "இனி ஆன்லைனில் திருச்செந்தூர் பிரசாதம்".! பக்தர்கள் குஷி.!!

    டபுள் டமாக்கா..! "இனி ஆன்லைனில் திருச்செந்தூர் பிரசாதம்".! பக்தர்கள் குஷி.!!

    தமிழ்நாடு
    இன்று ‘டாக்சிக்’ ரிலீஸ்..!! படம் ரசிகர்களுக்கு பிடிக்கணுமாம்.. So தர்மஸ்தலா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய யாஷ்..!

    இன்று ‘டாக்சிக்’ ரிலீஸ்..!! படம் ரசிகர்களுக்கு பிடிக்கணுமாம்.. So தர்மஸ்தலா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய யாஷ்..!

    சினிமா
    என்ன ஐடியா.? இலவச வேட்டி சேலைத் திட்டத்தையும் தாரைவாக்க போகுதா தவெக அரசு.? TTV தினகரன் விளாசல்.!

    என்ன ஐடியா.? இலவச வேட்டி சேலைத் திட்டத்தையும் தாரைவாக்க போகுதா தவெக அரசு.? TTV தினகரன் விளாசல்.!

    தமிழ்நாடு
    ஆடை விவகாரம் ஏற்படுத்திய புதிய சர்ச்சை..!! கிருத்தி சனோனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல் காந்தி..!

    ஆடை விவகாரம் ஏற்படுத்திய புதிய சர்ச்சை..!! கிருத்தி சனோனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல் காந்தி..!

    சினிமா
    தேவையா.? பேரவையில் குழாயடி சண்டை...! சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு..!

    தேவையா.? பேரவையில் குழாயடி சண்டை...! சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டபுள் டமாக்கா..!

    டபுள் டமாக்கா..! "இனி ஆன்லைனில் திருச்செந்தூர் பிரசாதம்".! பக்தர்கள் குஷி.!!

    தமிழ்நாடு
    என்ன ஐடியா.? இலவச வேட்டி சேலைத் திட்டத்தையும் தாரைவாக்க போகுதா தவெக அரசு.? TTV தினகரன் விளாசல்.!

    என்ன ஐடியா.? இலவச வேட்டி சேலைத் திட்டத்தையும் தாரைவாக்க போகுதா தவெக அரசு.? TTV தினகரன் விளாசல்.!

    தமிழ்நாடு
    தேவையா.? பேரவையில் குழாயடி சண்டை...! சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு..!

    தேவையா.? பேரவையில் குழாயடி சண்டை...! சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    சினிமாவை மிஞ்சிய பயங்கரம்... தொழிலாளியை கூலிப்படையுடன் சேர்ந்து கொன்ற முதலாளி... காட்டிக்கொடுத்த ‘பச்சை’....!

    சினிமாவை மிஞ்சிய பயங்கரம்... தொழிலாளியை கூலிப்படையுடன் சேர்ந்து கொன்ற முதலாளி... காட்டிக்கொடுத்த ‘பச்சை’....!

    தமிழ்நாடு
    கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை.. திமுகவில் 110 புதிய மாவட்டங்கள்! விரைவில் வெளியாகும் பட்டியல்!!

    கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை.. திமுகவில் 110 புதிய மாவட்டங்கள்! விரைவில் வெளியாகும் பட்டியல்!!

    தமிழ்நாடு
    அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு... குறைகளை கொட்டிய மக்கள்..!!

    அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு... குறைகளை கொட்டிய மக்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share