இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25-வது திரைப்படமான "பராசக்தி" படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் இந்த ‘பராசக்தி’ திரைப்படம், சமூகத்திலும், அரசியலிலும் முக்கியத்தைப் பெறும் ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரங்கள் தரப்பிலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதைக்களம், இந்திய அரசியல் சூழ்நிலை, கல்வி அமைப்புகள், மாணவர் இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகநிலை பரிமாணங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
இறைக்கு திறந்தது, சூரரை போற்று போன்ற அற்புதமான, ரசிகர்களின் மனதை வென்ற திரைப்படங்களை இயக்கிய சுதா கொங்கரா, ‘பராசக்தி’யின் இயக்குனராக இருப்பது தான் படத்தின் . சமூக அரசியல் விழுப்புணர்வுடன் கூடிய திரைக்கதை வடிவமைக்கப்படுவதால், இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகும் படம், தமிழ் மீது அனைவரது கவனமும் அதிகம் இருக்க காரணமாக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன், பாசில் ஜோசப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்திய தகவலின்படி, இப்படத்தில் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான ராணா டகுபதி புதிய பாத்திரத்தில் இணைந்துள்ளார்.

அவரின் திரைக்காட்சிகள் தற்போது பொள்ளாச்சியில் நடைபெறும் படப்பிடிப்பில் காட்சியாக்கப்பட்டு வருகின்றன. இலங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, இப்போது படக்குழு பொள்ளாச்சியில் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. இதில் பல முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய கல்லூரி சூழ்நிலை காட்சிகள் மற்றும் மாணவர் இயக்க காட்சிகள் சீராக தயாராகின்றன. இங்கு நடைபெறும் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், ராணா டகுபதி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். பொள்ளாச்சியின் இயற்கை அழகும், தமிழ் கிராமத்து உணர்வும் ஒருங்கிணைந்த இந்த படப்பிடிப்பு பகுதிகள், கதையின் உணர்வை மேலும் ஆழப்படுத்தும் வகையில் இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில், இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றுகின்றார். ஒளிப்பதிவில் ரவி கே.சந்திரன் பயணித்து வருகிறார்.
இதையும் படிங்க: பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் ராசி கண்ணா..! "உஸ்தாத் பகத்சிங்" படத்தில் முக்கிய கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு..!
இப்படத்தை 'டான் பிக்சர்ஸ்' நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்திய அரசியல் மற்றும் மாணவர் இயக்கங்களை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், இசை, கதைக்களம், படப்பிடிப்பு தரம் போன்ற அம்சங்களில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக கூறப்படுகிறது. ‘பராசக்தி’ திரைப்படம், 2026-ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை அன்று திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான, இறுதிக்கட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் ஆழமான கதைக்களத்துடன் கூடிய இப்படம், தமிழ் திரையுலகில் அரசியல், சமூக விழிப்புணர்வுகள் மிக்க திரைப்படமாக அமைவதற்கான முன்னேற்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆகவே இப்படம் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயனின் நடிப்பு, சுதா கொங்கராவின் இயக்கம், ஜி.வி. பிரகாஷின் இசை, ராணா டகுபதியின் பங்களிப்பு என பல அம்சங்கள் இதில் பங்கு பெறுவதால், 'பராசக்தி' திரைப்படம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே அரசியல், சமூகம் மற்றும் மாணவர் இயக்கங்கள் ஆகிய மூன்றையும் மையமாகக் கொண்டு உருவாகும் இந்த 'பராசக்தி' திரைப்படம், தமிழ் சினிமாவின் ஒரு புதிய பரிமாணமாகப் பார்க்கப்படுகிறது. 2026 பொங்கல் அன்று வெளியாகவுள்ள இப்படம், ஒரு புரட்சிகரக் கதையாக திரையுலகில் பதிவு செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: என் அப்பா அனைவரையும் ‘இதயங்கள்’ என்று தான் அழைப்பார்..! உணர்ச்சி வசப்பட்டு பேசிய நடிகர் பிரபு..!