சமீபத்தில் நடந்த ‘துரந்தர்’ திரைப்பட விழாவில் நடிகை சாரா அர்ஜுனை நடிகர் ராகேஷ் பேடி தழுவியதும், பின்னர் கழுத்தில் முத்தமிட்டதும் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையாக மாறியது. 20 வயதான இளம் நடிகையிடம் 71 வயதான மூத்த நடிகர் இவ்வாறு நடந்து கொண்டது ஏன் என்ற கேள்வியுடன் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, நிகழ்ச்சி புகைப்படங்களும் காணொளிகளும் வைரலாகப் பரவியதால், இந்த விவகாரம் பாலிவுட்டில் விவாதப் பொருளாகிவிட்டது.
விமர்சனங்களை தணிக்க ராகேஷ் பேடி உடனடியாக விளக்கம் அளித்து, “சாரா என் மகளாகவே படத்தில் நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது உருவான பாசத்தாலும், அவளைப் பார்த்தாலே மகளைப் போல எண்ணி கட்டிப்பிடித்தேன்” என்று தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்த விளக்கத்துக்கு பிறகும் சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனத்தை தொடர்ந்ததால், மூத்த நடிகர் இதனால் மனவருத்தம் அடைந்துள்ளார்.

தற்போது ‘துரந்தர்-2’ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ராகேஷ் பேடி, இந்த சர்ச்சை தனது மனதிற்கு ஏற்பட்ட தாக்கத்தை திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார். “என் மீது சுமத்தப்பட்ட களங்கம் என் மனதை வாட்டிக் கொண்டே இருக்கிறது. நான் ஒரு தந்தை–மகள் பாசத்தை அப்படியே வெளிப்படுத்தினேன். ஆனால் அதை இப்படி தவறாக சித்தரிக்கிறார்களே… மனம் வேதனைப்பட்டேன்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: உங்களை பற்றி பேச மற்றவர்களுக்கு அருகதை கிடையாது..! இயக்குநர் செல்வராகவன் காட்டமான பேச்சு..!
மேலும், சமூக வலைதளங்களில் யாரும் எதையும் பெரிய விவாதமாக மாற்றி விடும் காலமிது என்கிறார். “பலரும் எனக்காக நியாயமாகப் பேசியது எனக்கு ஒரு ஆறுதல். ஆனால் சிலர் தேவையில்லாமல் பேசிச் சிக்கலை உருவாக்கவே விரும்புகிறார்கள். அந்த சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் பிரபலங்களின் நிலை பரிதாபமாகத்தான் இருக்கும்” என்றும் ராகேஷ் பேடி வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து திரைப்பட உலகின் சில பிரபலங்களும் ராகேஷ் பேடியின் ஆதரவாக கருத்து தெரிவித்து, “அவரின் நடத்தைப் பின்னணி அறியாமல் தீர்ப்பு அளிப்பது தவறு” என்று கூறியுள்ளனர். சாரா அர்ஜுனின் குடும்பத்தார் தரப்பில் இதுவரை எந்த எதிர்மறை குற்றச்சாட்டும் எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறு தவறான புரிதல், புகைப்படம் எடுக்கப்பட்ட கோணம் அல்லது சமூக வலைதளங்களில் ஏற்பட்ட அதிகப்படியான எதிர்வினை ஒரு மனிதரை எப்படி மன உளைச்சலுக்குள் தள்ள முடிகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகவே இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. தன்னைச் சுற்றி உருவான தேவையற்ற சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஆசையில் தான் இந்த விளக்கங்களை வழங்கியுள்ளதாக ராகேஷ் பேடி தெரிவித்துள்ளார்.
திரையுலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பணியாற்றி வரும் ராகேஷ் பேடி, தனது மரியாதை மற்றும் நடத்தை குறித்து எந்த நேரத்திலும் குற்றச்சாட்டு எழாத சூழலில், இத்தகைய சர்ச்சை தன்னை காயப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியில், ‘துரந்தர் 2’ படக்குழுவும் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கவும், படத்தின் வெற்றியை முன்னிலைப்படுத்தவும் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சர்ச்சை இன்னும் எவ்வாறு நகரும் என்பது தெரியாமல் இருந்தாலும், “தந்தை–மகள் பாசத்தையே சந்தேகப்படுத்தும் அளவிற்கு சமூக வலைதளங்கள் மாறிவிட்டன” என்பது ராகேஷ் பேடியின் வேதனை நிறைந்த கருத்து என்பதை பலரும் உணர்ந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ‘காந்தாரா’ படத்தை கிண்டல் செய்த விவகாரம்..! நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்..! வழக்கை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்..!