மகேஸ்ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கர்நாடகத்தில் 'தக் லைப்' படத்திற்கு கன்னட சினிமா வர்த்தக சபை தடை விதித்து நீதித்துறையின் அதிகாரத்தை மீறி வருவதாகவும் ஆதலால் இதனை உடனே பரிசீலனை செய்து கர்நாடகத்தில் தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இதனை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த்குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் கர்நாடக அரசு, கன்னட சினிமா வர்த்தக சபைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளக்கும்படி உத்தரவிட்டு இருந்தனர்.

இப்படியான வேளையில், இன்று மீண்டும் இந்த பொதுநல மனுவை நீதிபதி உஜ்ஜல் பூயான் மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது, அப்பொழுது பேசிய நீதிபதி புயான், "கும்பல்களும், கண்காணிப்பு குழுக்களும் தெருக்களைக் கைப்பற்றுவதை நாங்கள் ஒருகாலமும் அனுமதிக்க முடியாது. சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். இது நடக்க அனுமதிக்க முடியாது. யாராவது ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தால், அதை ஒரு அறிக்கையின் மூலம் எதிர்க்க வேண்டியது தானே என கேட்டார். இதனை அடுத்து மனுதாரரின் வழக்கறிஞர் படம் வெளியீட்டுக்கு மிரட்டல் விடுத்த நபர்கள் மீது கர்நாடக அரசு எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

மேலும், "CBFC சான்றிதழ் பெற்ற எந்தவொரு படத்தையும் வெளியிட வேண்டும் என்றும், அதன் திரையிடலை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்ட விதிகள் கூறுகிறது. இப்படி இருக்க திரைப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகள் எரிக்கப்படும் என்று அச்சுறுத்துபவர்கள் இருக்கும் பயத்தில் எங்களால் படத்தை திரையிட முடியாது. மக்கள் படத்தைப் பார்க்காமல் இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் மக்கள் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் படத்தை வெளியிட வேண்டும் என்று தான் கூறுகிறோம் என வழக்கறிஞர் சொல்ல, அதற்கு பதிலளித்த நீதிபதி மன்மோகன் "சட்டத்தின் ஆட்சி முக்கியமானது. யாராவது ஒரு படத்தை திரையிட விரும்புவதை அரசு உறுதி செய்ய வேண்டும், அந்த படம் CBFC சான்றிதழ் பெற்ற பிறகு கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதனை அடுத்து பேசிய மாநில அரசு வழக்கறிஞர், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை படத்தை கர்நாடக மாநிலத்தில் வெளியிட வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என கூறினார். இதற்கு பதிலளித்த நீதிபதி புயான், கமல்ஹாசன் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் எப்படி கேட்கலாம், இது உயர் நீதிமன்றத்தின் வேலை அல்ல என தனது எதிர்ப்பை வெளிக்காட்டினார்.

மேலும், இந்த எதிர்ப்புவாத அமைப்பில் ஏதோ தவறு இருக்கிறது, ஒரு நபர் தனது சுயலாபத்திற்காக ஒரு அமைப்பை உருவாக்குகிறார்.. இந்த விவகாரம் குறித்து விவாதம் நடக்கட்டும். அவர் தவறு என்ன என்று மக்கள் சொல்லட்டும்," என்று நீதிபதி மன்மோகன் கூறினார். "பெங்களூரில் உள்ள அனைத்து அறிவொளி பெற்ற மக்களும் கமல்ஹாசன் தவறு என்று அறிக்கை வெளியிடலாம். ஆனால் ஏன்? அச்சுறுத்தல்களை நாட வேண்டும்?" என்று நீதிபதி புயான் கூறினார். மேலும், ஆகவே இது மீண்டும் மொழி வாத பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, "கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது எனவும் நமது வீதிகளை குண்டர்கள் கைப்பற்ற அனுமதிக்க முடியாது என்றும், திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. அதேபோல் திரைப்படத்தைப் பார்த்து நன்றாக இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டிய கடமை மக்களிடத்திலே உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற பெஞ்ச் உத்தரவிட்டது. அதேபோல் எதன் அடிப்படையில் இப்படத்தை வெளியிட கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது என்பதை ஜூன் 19 அன்று விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!