விஜய்க்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் அப்படி என்னதான் போன ஜென்மத்து பகையோ தெரியவில்லை.. அவர் என்ன பேசினாலும் உடனே வந்து அட்டனன்ஸ் போட்டு விடுகிறார் ப்ளூ சட்டை. விஜயை குறித்து ப்ளூ சட்டை பேசுவது ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் சமீப காலமாக ப்ளூ சட்டை பதிவும் மக்களை கொஞ்சம் யோசிக்கத்தான் வைக்கிறது என பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்க, நடிகர் விஜய், கடந்த ஆண்டு விக்கிரவாண்டில் நடத்திய தவெகவின் முதல் மாநாட்டில், தனது பலத்தை காமித்து அனைத்து கட்சிகளின் பயத்தை வெளிப்படுத்த செய்திருக்கிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் "ஜனநாயகன்" திரைப்படத்துடன் தன்னுடைய திரையுலக பயணத்தை முடித்துவிட்டு, முழு நேர அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்பொழுது படப்பிடிப்பு ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் விஜயின் அரசியல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அதனுடன் சேர்ந்து சர்சைகளும் அவருக்கு எதிராக வலுத்து வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களுக்கு வெஜ் பிரியாணி சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், கேரட் அல்வா, ஐஸ்கிரீம் என ஒட்டுமொத்தமாக 21 ஐட்டங்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு.. மலேசியாவில் அப்டேட் சொன்ன இயக்குநர்!!

இதனை பார்த்த உடனே பதிலளித்த ப்ளூ சட்டை மாறன், தவெக கட்சி நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் சைவம் மட்டுமே பரிமாறப்படுகிறது. இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிலும் சைவம் தான். மற்ற கட்சிகள் பெரும்பாலும் சைவம் அசைவம் என இரண்டையும் பரிமாறுவது வழக்கம். கலந்து கொள்பவரில் எத்தனை பேர் சைவம், எத்தனை பேர் அசைவ உணவை விரும்பகிறார்கள் எனும் பட்டியலை சில தினங்களுக்கு முன்பே தயார் செய்து விடுவார்கள். இப்படி இருக்க, விஜய் அவர்களே நீங்கள் எதற்காக இந்த சைவ உணவு முறையை கடைபிடிக்கிறீகள் எந்த கட்சியை முன்பாக நிறுத்துகிறீகள் என கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து, சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சியை சார்ந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசும்பொழுது திமுகவையும் மோடியையும் மிகவும் அதிகமாக சாடி பேசி இருந்தார். அவர் பேசிய வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி விமர்சனத்திற்குள்ளானது. இதற்கும் உடனே பதிலளித்த ப்ளூ சட்டை மாறான், ரெண்டு பேரும் ரகசிய கூட்டணி வச்சி.. நாடகம் போடறாங்க என திமுக - பாஜக குறித்து கொக்கரித்தார் விஜய். ஆனால், EPS, செங்கோட்டையன் டெல்லி செல்கிறார்கள். அமித் ஷாவை சந்திக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிறது. வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளார் 'ஒரே ஒரு குருக்கள் ' ஜி.கே.வாசன். வாக்கெடுப்பை புறக்கணித்து எஸ்கேப் ஆனார் அன்புமணி.

வாக்கெடுப்பு நடந்த நாளில் டெல்லி சென்ற இளையராஜா.. வாக்களித்தாரா இல்லையா என்பது மர்மமாக உள்ளது. இஸ்லாமியர்களை பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதில் இவர்களுக்கு என்ன சிக்கல்? தமிழக மக்களிடம் கெட்ட பெயர் வரக்கூடாது. மேலிடத்தையும் பகைத்துக்கொள்ள கூடாது எனும் இரட்டைவேடம்தானே இது? இன்று சென்னையில் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாக செய்தி வந்துள்ளது.

இதில் ஒன்றுகூட பனையூர் பண்ணையாரின் கண்களுக்கு தெரியவில்லையா? இவர்கள் எல்லாரும் போடும் நாடகத்திற்கு என்ன பெயர்? மைக் முன்பு தொண்டை கிழிய கத்துபவர்.. இப்போது ஏன் அமைதியாக இருக்கிறார்? இவர்கள் எல்லாம் உங்கள் தீம் பார்ட்னர்கள் என்பதால்தானே. பெரிய சிஐடி சங்கர். ரகசிய கூட்டணியை கண்டுபுடிச்சி ஊருக்கு சொல்றாராம். இப்ப வாயை தெறங்க ப்ரோ. என பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்து ஒருபுறம் தவெக தொண்டர்கள் கடுப்பில் இருக்க தற்பொழுது மீண்டும் நடிகர் விஜயை வம்புக்கு இழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அந்த வகையில், சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் " மாணவர்கள் அனைவரும் படிப்பில் சாதிக்க வேண்டும் தான், படிப்பும் ஒரு சாதனை தான். அதை நான் ஒருபொழுதும் மறுக்கவில்லை. ஆனால் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரே ஒரு படிப்பில் மட்டும் அதிக நாட்டம் செலுத்தி, அதில் மட்டும் நாம் சாதித்தே ஆக வேண்டும் என நினைப்பது எல்லாம் சாதனையே கிடையாது. அந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அதிகமாக யோசித்து உங்கள் கவலைகளை அதிகரித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அந்த அளவுக்கு மன அழுத்தத்தை இப்பொழுது தேவையுமில்லை.

இப்பொழுது எதற்க்காக இதனை நான் சொல்லுகிறேன் என்றால், நீங்கள் பெரியதாய் நினைக்கும் நீட் மட்டும் உலகமல்ல. நீட்டைக் கடந்து இந்த உலகமானது மிகவும் பெருசு. அதில் நீங்கள் அதிகமாக சாதிக்க வேண்டி உள்ளது. எனவே இப்போதே உங்கள் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மனதை என் படத்தின் டைட்டிலை போல ஜனநாயகமாக வைத்துக் கொள்ளுங்கள். ஜனநாயகம் இருந்தால் தான் இந்த உலகமும் சரி, உலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் சரி, அனைத்தும் சுதந்திரமாக இருக்க முடியும். பெற்றோர்களே... உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை இந்த நேரத்தில் வைக்கிறேன்.

குழந்தைகள் விஷயத்திலும் அவர்கள் படிப்பின் விஷயத்திலும் அதிகமாக தலையிட்டு அதிக அழுத்தத்தை கொடுக்காதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் வழி நடத்துங்கள். குழந்தைகள் எத்தனை தடைகள் வந்தாலும் அவர்களுக்கு பிடித்த துறையில் அதிகமாக சாதித்து காட்டுவார்கள் அவர்களை நம்புங்கள்" என கூறினார்.

இதனை பார்த்து கடுப்பான ப்ளூ சட்டை மாறன் அவரது எக்ஸ் தளத்தில் விஜய் பேச்சுக்கு பதிலளித்துள்ளார். அந்த பதிவில், " விஸ்வகர்மா மூலம் குலத்தொழில் ஊக்குவிக்கப்படுகிறது - பாஜக. ஆடு, மாடு மேய்ப்பதை அரசு தொழில் ஆக்குவேன் - சீமான். சாதாரண குடும்பத்தை சேர்ந்த உங்களுக்கு மருத்துவராகும் கனவு எதற்கு? வேறு படிப்பை படியுங்கள் என்பதன் polite version விஜய் பேசியது" என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது ப்ளூ சட்டை மாறனின் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: உதயநிதிக்கு சந்தானம்.. விஜய்க்கு ஆதரவாக நடிகர் சூரி தேர்தல் பிரச்சாரம்..?