தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக பல தசாப்தங்களாக திகழ்ந்து வந்த நடிகர் விஜய், தற்போது தனது முழு கவனத்தையும் அரசியலுக்கு மாற்றிக் கொண்டுள்ளார். தன்னுடைய ரசிகர்கள் வட்டம், பாக்ஸ் ஆஃபிஸ் சக்தி, சமூகத்தில் கொண்டுள்ள செல்வாக்கு ஆகியவற்றை ஒரு பெரிய தளமாக மாற்றி, முழுநேர அரசியல்வாதியாக பணியாற்ற விரும்புவதாக அவர் ஏற்கனவே அறிவித்தார்.
“ஜனநாயகன்” திரைப்படம் தான் தனது கடைசி படம் என்றும், அதன் பின்னர் தனது முழு கவனமும், நேரமும், உழைப்பும் அரசியலுக்கே செலுத்தப்படும் என்றும் கூறிய அவர் எடுத்த இந்த முடிவு, சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. விஜயின் ரசிகர்கள் மட்டுமன்றி, பொது மக்களும், திரை உலகைச் சேர்ந்த பலரும், அவரது முடிவை மதித்தாலும், இது தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பு என ஏமாற்றத்தையும் வெளியிட்டனர்.
ஏனென்றால், நடிகராக அவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்திருந்தார். இந்நிலையில், விஜயின் மிக நெருங்கிய நண்பரான நடிகர் ஷ்யாம், அவர் எடுத்த இந்த முக்கிய முடிவை பற்றிய உள்ளகத் தகவல்களை வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சென்சார் சிக்கலில் சிக்கிய ‘ஜனநாயகன்’..! மியூட் செய்யப்பட்ட அரசியல் வசனங்கள்.. அதிரடி காட்டிய தணிக்கை குழு..!

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஷ்யாம், விஜயின் முடிவைப் பற்றிய தன்னுடைய உரையாடல்களை வெளிப்படையாக பகிர்ந்தார். அவர் “விஜயிடம் நேராகவே கேட்டேன்… ‘ஜனநாயகன்’ தான் கடைசி படம் என ஏன் அறிவித்தார்? இன்னும் பல ஆண்டுகள் நடிப்பதற்கான திறன், ஆற்றல் எல்லாம் இருக்கும்போது சினிமாவை இப்படி திடீரென்று விட்டுவிடுவது ஏன்?” என்கிறார். இதற்குப் பதிலாக விஜய் மிக எளிமையாகவும் தெளிவாகவும் கூறிய பதில்தான் ஷ்யாமை அதிகம் கவர்ந்ததாம்.
“ஒரே விஷயத்தில் முழு கவனம் செலுத்தினால்தான் அதில் சாதிக்க முடியும். இரண்டு பெரிய துறைகளில் ஒரே நேரத்தில் ஈடுபட்டால், எதிலும் 100% கொடுக்க முடியாது. அதனால்தான் ஒரு முடிவை எடுத்தேன்” என்று விஜய் சொன்னதாக ஷ்யாம் குறிப்பிட்டார். இந்த வார்த்தைகள், விஜய் அரசியலை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளார் என்பதையும், அவர் தனது புதிய பாதைக்கு 100% உழைப்பை கொடுக்கத் தயாராக உள்ளார் என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
விஜய் தனது சினிமா பயணத்திற்கு நிறைவு வைக்கும் திரைப்படமாக ‘ஜனநாயகன்’-ஐ தேர்வு செய்திருப்பதால், இது சாதாரண படம் அல்ல. இது விஜயின் இறுதி ஸ்கிரீன் தோற்றம் என்பதாலேயே ரசிகர்களிடையே இது குறித்து மிகப்பெரிய ஆர்வம், எதிர்பார்ப்பு, உணர்ச்சிவசப்பட்ட ஏங்கல் ஆகியவை உருவாகியுள்ளது. ஷ்யாம் இதை பற்றி பேசும்போது, மிக நம்பிக்கையுடனும் உறுதியுடனும் கருத்து தெரிவித்தார்.

அதில் “ஜனநாயகன் எப்போது வெளியானாலும் அது ஒரு சாதாரண திரைப்படமல்ல. தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய ஓப்பனிங், மிக அதிகமான ரசிகர் வருகை, பாக்ஸ் ஆஃபிஸில் புதுப்புது சாதனைகள்—இவை அனைத்தையும் முறியடிக்கும் அளவுக்கு படம் இருக்கும் என நம்புகிறேன்” என்றார். அவரது இந்த நம்பிக்கை வெறும் நண்பன் பாராட்டு மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் தற்போதைய வரலாற்றை பார்த்தாலும் விஜயின் ரசிகர்கள் சக்தி, திரையிட்ட விஸ்வரூப வரவேற்பு என இவை அனைத்தும் இந்த கருத்துக்கு வலு சேர்க்கின்றன.
விஜயின் சினிமா முடிவுக்கான அறிவிப்பு வெளியானபோது, ரசிகர்கள் மனமுவந்த அழுத்தமான பதிவுகள் சினிமா பிரபலங்களின் உணர்ச்சிப்பூர்வமான கருத்துகள் எல்லாமே சில நாட்கள் டிரெண்டாகிவிட்டன. இது விஜய் ஒரு நடிகராக எவ்வளவு மக்களை பாதித்துள்ளார், அவரின் பயணம் எவ்வளவு பெரியது என்பதை மறுபடியும் உணர்த்தியது. விஜயின் “தமிழக வெற்றி கழகம்” தற்போது மாநில அரசியல் சூழலின் மையப் புள்ளியாகிவிட்டது. கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திப்பது, கட்சிப் பணிகளை வலுப்படுத்துவது, இளம் தலைமுறைக்கான திட்டங்களைக் கூறுவது.
எல்லாத்திலும் விஜயின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. அவர் இனி நடிகராக அல்ல, முழுநேர அரசியல்வாதியாக மட்டுமே தன்னை அமைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பது தெளிவாக தெரிகிறது. இதற்காகவே அவர் தனது சினிமா பங்களிப்பை நிறுத்திக்கொண்டு, அரசியலில் முழுநேரமாக ஈடுபடுகின்றார் என்பதே ஷ்யாம் வெளிப்படுத்திய உரையின் சாரம். விஜயின் இந்த முடிவு தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரிய மாற்றம் என்றாலும், அவருக்குக் கிடைத்த மக்களின் அன்பு, மரியாதை, நம்பிக்கை என இவை அனைத்தும் அவரது அரசியல் பயணத்தையும் அதேளவு வலிமையுடன் முன்னோக்கிக் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

ஷ்யாம் வெளியிட்ட தகவல்கள், விஜயின் மனநிலையை, அரசியல் குறித்த தீவிரத்தை, ‘ஜனநாயகன்’ படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை மக்களுக்கு மேலும் தெளிவாக எடுத்துச் சென்றுள்ளது. ‘ஜனநாயகன்’ எப்போது வெளிவந்தாலும் அது வெறும் படம் அல்ல—ஒரு தலைமுறையின் நட்சத்திரத்திற்கு கிடைக்கும் பெரிய திரை விடைபெறல் என்பதில் ரசிகர்களும், திரையுலகத்தினரும் இணைந்து நம்பிக்கை வைக்கும் நிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் கூட்டணிக்கு வரல.. அதுனாலதான படத்தை ரிலீஸ் பண்ண விடல..! ‘ஜனநாயகன்’ குறித்து இயக்குனர் அமீர் கடும் கேள்வி..!