தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.
அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர்.
இதையும் படிங்க: ‘அவரைக் கொன்றது நான் தான்’.. உண்மையான கொலையாளி யார்..? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ‘மூன்றாம் கண்’ பட ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு..!
இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த 2025-ல் வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ தமிழ் படத்தில் நடித்தார். அவருடைய நடிப்பில் வெளியான கடைசி படம் என்றால் மோகன்லாலின் ‘துடரும்’ படம் தான்.

கடந்த சில வருடங்களாக படங்களில் நடித்து வந்தவர், தனது மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கிப் போனார். கடந்த ஒரு சில மாதங்களாக பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். அதன் பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். இதற்கிடையேதான் கடந்த டிசம்பர் இறுதியில் உடல் நலக்குறைவால் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். மேலும், உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தன. இதிலிருந்து மீண்டு வந்த பாரதிராஜா வீட்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். தீவிர நுரையீரல் தொற்றுக்காக பாரதிராஜா வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரள பாரம்பரிய அழகில் ரசிகர்களை கவர்ந்த கார்த்திகா நாயர்..!! வெள்ளை-தங்க சேலையில் வெளியிட்ட போட்டோஸ் வைரல்..!