தமிழக வெற்றிக் கழகத்தின். செயல்வீரர்கள் கூட்டம் மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு, கட்சியின் தேர்தல் தயாரிப்புகளில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரடியாக உத்தரவிட்டுள்ள இந்த நடவடிக்கை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை முழுமையாகத் தயார்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்கள் தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெறவுள்ளன.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தலைமை தரப்பில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் ஐந்து தேர்தல் பணிமனைகளை அமைக்க வேண்டும் என்பதும் முக்கிய அறிவுறுத்தல்களில் ஒன்று. இதன் மூலம் கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்தி, தேர்தல் பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொள்ள முடியும் என்பது கட்சியின் எதிர்பார்ப்பு. தற்போது தமிழக அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தனித்து போட்டியிடும் முடிவை ஏற்கனவே விஜய் உறுதிப்படுத்தியுள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை கனியவில்லை என்பதால், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி மக்களிடம் நேரடியாகச் செல்லும் உத்தியை கட்சி கையில் எடுத்துள்ளது. இந்தச் சூழலில் மார்ச் 1 முதல் தொடங்கும் செயல்வீரர்கள் கூட்டங்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தேர்தல் உத்திகள், பிரசார முறைகள், பகுதி அளவிலான பிரச்சினைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளும் மேடையாக அமையும்.
இதையும் படிங்க: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!
இந்தக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது. தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக டூ மீண்டும் அதிமுக..!! எஸ்.பி.வேலுமணி சொன்ன பரபரப்பு விஷயம்..!! அரசியல் களத்தில் பூகம்பம்..!!