• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மத்திய பட்ஜெட்டால் யாருக்கு பலன்? நடுத்தர குடும்பத்தினரா, கோடீஸ்வரர்களா? புள்ளிவிவரங்களை அடுக்கிய ப.சிதம்பரம்

    மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26ம் ஆண்டு பட்ஜெட்டால் உலகின் உச்சத்தில் இருக்கும் கோடீஸ்வரர்களும்தான் பயன் அடைந்துள்ளதாக முன்னாள் நிதிஅமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    Author By Pothyraj Tue, 11 Feb 2025 12:06:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    P.Chidambaram decodes budget 2025

    மாநிலங்களவையில் 2025-26 பட்ஜெட் குறித்த விவாதம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசியதாவது, மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டால் இந்தியாவில் உள்ள நடுத்தரக் குடும்பத்தினர் மட்டும் பயன் அடையவில்லை, அதோடு  சேர்த்து இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களும், உலகளவில் முன்னணியில் இருக்கும் கோடீஸ்வரர்களும்தான் பயனடைந்துள்ளனர்.

    இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிவிலக்கால் 80 லட்சம் முதல் 85 லட்சம் வரி செலுத்துவோர் வரி செலுத்தும் பிரிவில் இருந்து அடுத்த நிதியாண்டிலிருந்து விலக்கு பெறுவர். 2.50 கோடி வரி செலுத்துவோர் புதிய வரிவிதிப்பு முறையால் ஆதாயம் அடைவார்கள்.

    இந்த 2.50 கோடி வரி செலுத்துவோர்கள் அனைவரும் நடுத்தரக் குடும்பத்தினர் அல்ல, அவர்களோடு சேர்த்து 2 லட்சத்து 27 ஆயிரத்து 315 பேர் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோர். 262 பேர் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோர், 23 பேர் ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு வருமானம் ஈட்டுவோர் என்பது தெரியுமா.

    இதையும் படிங்க: பெயர்தான் 100 நாட்கள் வேலை! 44 நாட்கள்தான் வேலையாம்! நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கவில்லை

    #budget2025

    வரிவிலக்கு அளித்ததால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதிஅமைச்சர் தெரிவித்துள்ளார். 2025-26ம் ஆண்டில் மத்திய அரசின் வரி வருவாய் 11.1% உயரும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் நடப்பு நிதியாண்டிலேயே 11 சதவீதம் வரிவசூல் உயர்ந்துள்ளதே. பிறகு எப்படி ஒரே மாதிரியாக இரு ஆண்டுகளிலும் வரிவசூல் 11 சதவீதம் உயர்வு ஏற்படும்.

    நடப்பு நிதியாண்டில் எந்த வரிச்சலுகையும் அளிக்காத நிலையி்ல் வரும் நிதியாண்டில் வரி விலக்கு அளித்துள்ளதால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு எனத் தெரிவித்தபோதும் 11 சதவீதம் வரிவசூலில் உயர்வு ஏற்படுமா. இது உண்மையில் மாயஜாலம்தான், துல்லியமான கணிதம் அல்ல. இந்த பட்ஜெட் டெல்லி தேர்தலை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது, அரசியல் ரீதியாக இந்த பட்ஜெட்  உருவாக்கப்பட்டது.

    #budget2025

    பட்ஜெட்டுக்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்க வேண்டும், ஆனால் இந்த பட்ஜெட்டில் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பட்ஜெட் உரை மற்றும் பட்ஜெட் எண்களைப் படித்த பிறகு, பட்ஜெட்டுக்குப் பின்னால் எந்த தத்துவமும் இல்லை  என்பதால் அதை படிக்க முயற்சிக்கமாட்டேன்.

    இந்த பட்ஜெட் அரசியல்ரீதியாக, அரசியல் லாபத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், இதற்கு மேல் இதை விளக்க முடியாது. ஆனால், இரு நாட்களுக்கு முன் லட்சியத்தை(டெல்லி தேர்தல் வெற்றி) அடைந்தமைக்காக நிதிஅமைச்சரைப் பாராட்டுகிறேன். நிர்மலா சீதாராமன் ஒன்றும் செய்யவில்லை, வருமானவரியிலும், டெல்லி தேர்தலை மட்டும் மனதில்வைத்து கவனம் செலுத்தினார்.

    மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு(100நாள் வேலைதிட்டம்) ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரிவிதிப்பு பற்றி முடிவு செய்யவில்லை. 2012- முதல் 2024 வரை உணவுப் பணவீக்கம் 6.18 சதவீதமாக இருந்தது, கல்விப் பணவீக்கம் 11 சதவீதம், சுகாதாரப் பணவீக்கம் 14 சதவீதமாக இருந்தது. இது இந்திய குடும்பங்களை நசுக்கிவிட்டது. வீடுகளில் தாய்மார்கள் சேமிப்பும் குறைந்து 25.2 சதவீதத்திலிருந்து 18.4 சதவீதமாகக் குறைத்துவிட்டது.

    #budget2025

    மாதத்துக்கு சராசரியாக தனிநபர் ஒருவரின் செலவு கிராமத்தில் ரூ.4226 ஆகவும், நகர்புறங்களில் ரூ.6996ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் சராசரிக் குடிமகனுக்கு இந்த பட்ஜெட் என்ன செய்துள்ளது, என்ன சலுகையை வழங்கியிருக்கிறது தெரிவிக்க முடியுமா.

    அதாவது சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் 50 சதவீதம் பேருக்கும், கடைநிலையில் இருக்கும் 25 சதவீதம் பேருக்கும் பட்ஜெட்டால் என்ன பயன். என்னவிதமான நிம்மதியை நிதியமைச்சர் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்க முடியுமா. இவர்களுக்காக பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்திருக்கலாம் அதைச் செய்தார்களா. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

    இதையும் படிங்க: மத்திய அமைச்சர்கள் ஊதியத்துக்காக ரூ.1,024 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

    மேலும் படிங்க
    சாவு பயத்தை காட்டிய இந்தியா...பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்

    சாவு பயத்தை காட்டிய இந்தியா...பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா
    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    இந்தியா
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா

    செய்திகள்

    சாவு பயத்தை காட்டிய இந்தியா...பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்

    சாவு பயத்தை காட்டிய இந்தியா...பதுங்கிய பாக்.பிரதமர்… ஓடிய அமைச்சர்கள்

    உலகம்
    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா...பற்றி எரியும் பாகிஸ்தான்!

    உலகம்
    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

    இந்தியா
    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியாவை தொட்ட... நீ கெட்ட! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை...

    இந்தியா
    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

    இந்தியா
    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    குறுக்குப் புத்தியைக் காட்டிய பாகிஸ்தான்; பிரதமர் மோடி அவசர மீட்டிங் - அடுத்தது என்ன? 

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share