இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெறுகின்றன. இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பொதுத்தேர்வுக் களம் காண உள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு All The Best என்று தெரிவித்தார்.
உங்களின் உழைப்பை சரியாக அறுவடை செய்யவேண்டிய நேரம் இது என்றும் எந்த பதற்றமும் இல்லாமல், தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு, வென்று வாருங்கள் எனவும் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாணவர்களுக்கு தெரிவித்தார். இன்று முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் எனதன்பு தம்பி தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள் என்றார்.

தேர்வினை நீங்கள் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள் துவங்கும் எந்தவொருச் செயலும் பாதி வெற்றி பெற்றதற்குச் சமம் எனவும் தெரிவித்தார். எனவே, என் அன்பிற்கினிய மாணவக்கண்மணிகள் அனைவரும் அச்சமின்றி தேர்வெழுதுங்கள் என்றும் உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாஸ் ஐடியா..! மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த செஸ் வகுப்புகள்... தமிழக அரசு திட்டம்..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வாழ்த்துகள் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள தாங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் என்றும் உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகாதீங்க.. போதுமான தூக்கம் தேவை..!! மாணவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்..!!