இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தற்போதையை பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காக பாகிஸ்தான் அதன் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றை விற்க முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA)-ஐ தனியார் நிறுவனங்களுக்கு விற்கத் தயாராகி வருகிறது. இந்நிறுவனம் மீது அரசுக்கு உள்ள பங்கில், 51 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல், நஷ்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை சரிசெய்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தல் ஆகிய அரசு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பாக் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை கவர்ச்சிகரமானதாக மாற்ற, புதிய விமானங்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது, பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் கடன்கள் தள்ளுபடி என பாகிஸ்தான் அரசாங்கம் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜூன் 9 தான் பள்ளிகள் திறப்பா? அப்போ ஜூன் 2 இல்லையா? தமிழக அரசு விளக்கம்!!

இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் அரசாங்கம் 60 சதவீத பங்குகளை விருப்ப முன்வந்தது. ஆனால் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனம் மீதிருந்த 45 மில்லியன் ரூபாய் எதிர்மறை ஈக்விட்டி மற்றும் விமானங்களுக்கு 18 சதவீத GST போன்ற கட்டுபாடுகளால் அந்த ஒப்பந்தம் தோல்வியடைந்தது. இதனால் தற்போது கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்து பாகிஸ்தான் விமான நிறுவனத்தை கூவி, கூவி அந்நாடு விற்கிறது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஏலத்திற்கான கடைசி விண்ணப்ப தேதி ஜூன் 3ம் தேதியிலிருந்து ஜூன் 19 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை பாகிஸ்தானின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மாறியது பாமக அலுவலக முகவரி.. முழுவீச்சில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்..!