அமெரிக்காவுடனான புதிய சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் பேச்சுவார்த்தைகளை நாசமாக்குவதை நோக்கமாகக் கொண்டே நடத்தப்பட்டது என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் குற்றச்சாட்டியுள்ளார்.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய எர்டோகன், இஸ்ரேல் ஆதரவு கரம் நீட்டும் நாடுகள், அதன் விஷத்தை நம்ப வேண்டாம் என்றும், தீவிர மோதலை அனுமதிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் சண்டைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, இஸ்தான்புல்லில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உச்சிமாநாட்டில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், “இஸ்ரேல் இப்போது நமது அண்டை நாடான ஈரானை தாக்குவதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியை முழுமையான பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்கிறது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஏமன் மற்றும் ஈரான் தரப்பில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் இஸ்ரேலின் பக்கம்தான் பிரச்சினை தெளிவாக உள்ளது.

இதையும் படிங்க: பேக் அடித்த ட்ரம்ப்... கையேந்தும் இஸ்ரேலை கை கழுவ திட்டம்... அமெரிக்க ராணுவத்திற்கு பறந்த உத்தரவு!
எனவே, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் வரம்பற்ற ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை மேலும் ஆபத்தில் ஆழ்த்தும் வன்முறைச் சுழலாக தற்போதைய நிலைமை மோசமடைவதை நாம் தடுக்க வேண்டும்.” என்று அவர் மேலும் கூறினார். பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, சிரியா, லெபனான் மற்றும் ஈரானிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நாம் அதிக ஒற்றுமையைக் காட்டுவது மிக முக்கியம் என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!