பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ( FBI ) அமெரிக்காவின் மேற்கு கடற்கரை நகரங்களுக்கு ஈரானிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் குறிவைத்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி, அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஆப்ரேஷன் எபிக் ஃபியூரி என்ற பெயரில் கூட்டுத்தாக்குதலை தொடங்கியது. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசியது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கி வைத்த இந்த போருக்கு பதிலடியாக இரண்டு வாரங்களாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் நாட்டின் உச்சத் தலைவர் உட்பட உயர்மட்ட ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக தெஹ்ரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பேரிடி... 3வது நாளாக முற்றிலும் முடக்கம்... சென்னைக்கு கடும் பாதிப்பு...!
தற்போது இருதரப்பிலும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் அமெரிக்காவிற்கு மிக முக்கியமான அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளது. கலிபோர்னியா மற்றும் பிற மேற்கு கடற்கரை நகரங்களில் உள்ள சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்கு பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் மிக முக்கியஎச்சரிக்கையை அனுப்பியுள்ளது. அதாவது ஈரான் மீதான சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளது.
ஈரான் அமெரிக்காவின் கடற்கரையில் அடையாளம் தெரியாத கப்பலில் இருந்து வான்வெளி மூலமாக ட்ரோன்களைப் பயன்படுத்தி திடீர் தாக்குதலை நடத்த விரும்புவதாகவும், குறிப்பாக கலிபோர்னியாவில் உள்ள குறிப்பிடப்படாத இலக்குகளுக்கு எதிராக, இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும் அதன் பிரதிநிதிகளும் அமெரிக்காவை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடும் என்று இந்த மாத தொடக்கத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
இருப்பினும், சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த எச்சரிக்கை இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாட்டால் திட்டமிடப்பட்ட ஒரு தவறான கணிப்பாக இருக்கலாம் என குற்றச்சாட்டி வருகின்றனர்.
ஈரான் எதையும் திட்டமிடவில்லை என்றும், ஈரான் திட்டமிடுவதாக இஸ்ரேலின் ரகசிய உளவு அமைப்பான மொசாட், அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அதிகாரிகளை தவறான வழியில் நடத்துவதாகவும் அமெரிக்க மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். ஏனெனில் அப்போது தான் ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் போரில் அமெரிக்க அங்கம் வகிக்கும் என்பதால் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே ஷாக்... தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு...!