அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை பாகிஸ்தான் பரிந்துரைத்துள்ள நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மற்றும் காங்கோ-ருவாண்டா நெருக்கடி உள்ளிட்ட பல உலகளாவிய மோதல்களை தடுத்து நிறுத்த தான் ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அப்படி பார்த்தால் எனக்கு 4-5 முறை அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலின் போது டிரம்பின் தீர்க்கமான இராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமைத்துவத்தை மேற்கோள் காட்டி, பாகிஸ்தான் அரசாங்கம் 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து தனது ட்ரூ சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டா குடியரசுக்கும் இடையே, பல தசாப்தங்களாக நடந்து வரும், வன்முறை ரத்தக்களரி மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய போரில், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து, ஒரு சிறப்பான ஒப்பந்தத்தை நான் ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வரும் திங்கள்கிழமை இருநாட்டு பிரதிநிதிகளும் வெள்ளை மாளிகையில் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். இது ஆப்பிரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள், வெளிப்படையாகச் சொன்னால், உலகிற்கு ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பேக் அடித்த ட்ரம்ப்... கையேந்தும் இஸ்ரேலை கை கழுவ திட்டம்... அமெரிக்க ராணுவத்திற்கு பறந்த உத்தரவு!
தொடர்ந்து, “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது, செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உட்பட பல சர்வதேச மோதல்களைத் தீர்க்க உதவியதாகக் கூறுகிறார்”. ரஷ்யா/உக்ரைன், இஸ்ரேல்/ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது, அந்த விளைவுகள் என்னவாக இருந்தாலும் சரி, ஆனால் மக்களுக்குத் தெரியும் அதுதான் எனக்குத் தேவை” எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள் பலரோ இருந்தாலும் டிரம்பிற்கு இவ்வளவு பெரிய ஆசை இருக்கக்கூடாது என விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உசுரு தப்பாது! அயதுல்லா காமெனிக்கு சாவு மணி! இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்!