பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் வீசிய நூல்களை இடைமறித்து இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துள்ளது. அதுமட்டுமல்ல பாகிஸ்தானுக்கு இந்தியா முழுவீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட பல்வேறு நகரங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

லாகூர், சியால்கோட், கராச்சி உன்கிட்ட நகரங்களை குறிவைத்த இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்லாமத்தில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் 16 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் பற்றி எரிகிறது. முசாபராபாத் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்...கலெக்டர் அதிரடி உத்தரவு

இதன் காரணமாக முசபராபாத் முழுவதும் சைரன் சத்தம் ஒழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏவுகணைகளை வீசியதில் கராச்சி துறைமுகம் பற்றி எரிவதாகவும் 10 ஏவுகணைகளை கராச்சி துறைமுகம் மீது இந்தியா வீசியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!