ஈரான், இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இன்று லெபனானுக்குள் புகுந்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு லெபனானில் பியூஃபோர்ட் கேஸ்டில் என்ற இடத்தில் ஹெஸ்புலா பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அங்கு மீண்டும் ராணுவ கட்டமைப்புகளை ஹெஸ்புலா பயங்கரவாதிகள் பலப்படுத்த முயன்றதால் தாக்குதல் நடத்தினோம் என்று இஸ்ரேல் கூறியது.
இந்த குண்டு வீச்சில் ஒருவர் இறந்தார். 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறி விட்டதாகவும், அப்பார்ட்மென்ட்டில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை குறி வைத்ததாகவும் லெபனான் அரசாங்கம் குற்றம் சாட்டியது.
இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு லெபனானில் மீண்டும் கட்டமைப்புகளை பலப்படுத்தும் வேலையை ஹெஸ்புலா செய்து வருகிறது.
இதையும் படிங்க: காமெனியை சாவுல இருந்து காப்பாத்தினேன்.. ஆனா அவருக்கு நன்றியே இல்லை.. கொந்தளிக்கும் ட்ரம்ப்..!

தாக்குதல் நடந்த இடத்தில் ராக்கெட் குண்டுகளை ஏவும் வசதி, சேமிக்கும் வசதியை ஹெஸ்புலா மேம்படுத்தியதை உறுதி செய்தோம். அதை அழிக்கவே தாக்குதல் நடத்தினோம். அவர்கள் சேமித்து வைத்திருந்த ராக்கெட் குண்டுகள் அங்கிருந்து பறந்து குடியிருப்பில் விழுந்து வெடித்ததால் சேதம் ஏற்பட்டு இருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தெற்கு லெபனானில் செயல்பட துவங்கி இருக்கும் ஹெஸ்புலாவை லெபனான் அரசு தடுக்க தவறியதன் விளைவே இந்த தாக்குதல் என்று இஸ்ரேல் கூறி உள்ளது.
ஹமாசுக்கு எதிரான போர் துவங்கியதில் இருந்து தெற்கு லெபனானில் இருந்தபடி வடக்கு இஸ்ரேலில் ஹெஸ்புலா பயங்கரவாதிகள் தொடர்ந்து குண்டு வீசி தாக்கினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்க லெபனாலில் இஸ்ரேல் போரில் குதித்தது. ஹெஸ்புலா பயங்கரவாதிகளையும், அவர்களது கட்டமைப்புகளையும் குண்டு வீசி அழித்தது. போரின் உச்சமாக ஹெஸ்புலா உச்ச தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் போட்டுத்தள்ளியது. இதையடுத்து போர் நிறுத்தம் வந்தது.

போர் நிறுத்த ஒப்பந்தப்படி லிட்டானியா ஆற்றுக்கு தெற்கே ஹெஸ்புலா வரக்கூடாது. அவர்களது எந்த கட்டமைப்புகளும் இருக்க கூடாது. இஸ்ரேல் எல்லையில் லெபனான் வீரர்கள் தான் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த போர் நிறுத்த விதிகளை ஹெஸ்புலா மீறி வருகிறது என்று இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.லெபானில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இதையும் படிங்க: கண்ணுல பட்டுருந்தா காலி பண்ணிருப்போம்! காமெனியை கொலை செய்ய ஸ்கெட்ச்.. இஸ்ரேல் ஒப்புதல்..