காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.

குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. நம் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து 15 பிரமோஸ் ஏவுகணை மற்றும் வேறு சில ஏவுகணைகளை இந்தியா வீசியது.
இதையும் படிங்க: வெறும் 8 மணி நேரம் தான்.. ஆட்டம் க்ளோஸ்.. பாக்., போன் பண்ணி கெஞ்சியதாக அனில் சவுகான் விளக்கம்..!
இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்களை ஊடுருவிக்கொண்டு, நூர் கான், ரபிக்கி, முரிட், ரஹீம் யார் கான், சுனியான், சுக்கூர் விமானப்படை தளங்கள் உட்பட 11 ராணுவ தளங்களை தகர்த்தது. ரன்வே, போர் விமானங்களை நிறுத்தி வைத்திருக்கும் இடம், ட்ரோன் ஏவுதளம், கட்டுப்பாட்டு அறைகளை குறி வைத்து இந்த அட்டாக் நடந்தது.இந்தியாவின் இந்த அடியில் தான் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.

சண்டையை நிறுத்தக்கோரி பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, இந்தியா சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க எம்.பிக்கள் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக மலேசியாவுக்கும் நமது எம்.பிக்கள் குழு பயணம் மேற்கொண்டது. இதற்கிடையே, மலேஷியாவிடம் பேசிய பாகிஸ்தான் தரப்பு, 'நாமெல்லாம் முஸ்லிம் நாடுகள்; இந்திய குழுவுடன் பேச வேண்டாம். அந்தப் பயணத்தை ரத்து செய்து விடுங்கள்' என்று கூறியது.

மேலும், ஜம்மு - காஷ்மீர் விவகாரம், ஐ.நா., சபையில் உள்ளதால், இந்தியக் குழுவை சந்திக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கையை, மலேஷியா ஏற்கவில்லை. இந்தியக் குழுவை, மலேஷிய உயர் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது இந்தியத் தரப்பில் கூறப்பட்டதை அவர்கள் ஆமோதித்தனர். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக, மலேஷியா வெளிப்படையாக கூறியுள்ளது.

முன்னதாக மத்திய அமெரிக்க நாடான பனாமா, பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரசைச் சேர்ந்த மூத்த எம்.பி.,யான சசி தரூர் தலைமையிலான குழு, இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. அதை ஏற்றுக் கொண்டு, தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, இந்தியாவின் முயற்சிகளுக்கு பனாமா ஆதரவு தெரிவித்தது.
இதையும் படிங்க: அதுக்கு இப்போ என்ன அவசியம்.. ராகுல்காந்தி, கார்கே கோரிக்கைக்கு ’No’ சொன்ன மோடி..!