ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து உள்ளது. 2 நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்திக் கொள்வதால் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். மருத்துவமனைகள், குடியிருப்புகள் என பல்வேறு இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடப்பதால் மக்கள் நிற்கதியாக உள்ளனர்.

இந்த நிலையில், அமைதிக்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என ஈரான் அதிபருடன், இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை வலியுறுத்தி உள்ளார். மசூத் பெஜேஷ்கியாவுடன் பேசிய பிரதமர் மோடி, அமைதிக்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு இது மட்டும் தான் கரெக்ட்டா வரும்.. விளாசிய ராகுல் காந்தி..!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுங்கள் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையிலான அமைதி நிலை நாட்ட பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தற்போதைக்கு பேச்சுவார்த்தைக்கு வாய்பில்லை என ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!