விசாரணையின் போது போலீஸார் என்னை வன்முறையாகத் தாக்க முயற்சி செய்தார்கள்; துப்பாக்கி முனையில் வைத்து என்னை மிரட்டுகிறார்கள் எனத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பரபரப்பு பாலிடிக்ஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிகக் கடுமையான முறையிலும் விமர்சனம் செய்து பேசிய குற்றச்சாட்டின் கீழ், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தவெக அரசுக் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் செயல்பாடுகளை மிகக் காரசாரமாக விமர்சித்துப் பேசினார். இது தவெக மற்றும் கூட்டணி வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாகக் கூறி அவரது இல்லத்தில் இருந்த மார்க்கண்டேயனைப் போலீசார் முறைப்படி கைது செய்தனர்.
இதையும் படிங்க: ரொம்ப ஸ்ட்ரிக்ட்..! போலீஸ் நடவடிக்கை... கொந்தளிக்கும் மார்க்கண்டேயன் ஆதரவாளர்கள்..!

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, சட்டப்படியான மருத்துவப் பரிசோதனைக்காக (Medical Check-up) அவரைத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஆவேசமடைந்த எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் உரத்த குரலில் கத்தினார். போலீஸ் விசாரணையின் போது என்னைக் கடுமையான முறையில் தாக்க முயற்சி செய்தார்கள். அதுமட்டுமன்றி, துப்பாக்கி முனையில் வைத்து என்னை மிரட்டி வருகிறார்கள். என்னை அடிக்கப் பார்க்கிறார்கள்.
மருத்துவமனை வளாகத்திற்குள் போலீஸ் காவலில் இருந்தபடியே ஆளுங்கட்சிக்கு எதிராக திமுக சட்டமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள இந்த துப்பாக்கி முனை" மிரட்டல் குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாகத் தென் மாவட்டங்களிலும் உச்சகட்டப் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைப் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "50 நாளில் 9 ஆணவ கொலைகளா?" முதல்வர் விஜய்க்கு திராவிட தமிழர் கட்சி அதிரடி செக்!