பஞ்சாப் மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான பகவந்த் மான் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மொஹாலியில் உள்ள போர்டிஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மூன்றாவது முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவமாகும்.
மஹா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சங்ரூர் மாவட்டம் துரியில் (துரி சப்-டிவிஷன், ரானிகே கிராமம்) உள்ள ஸ்ரீ ரண்கேஸ்வர் மஹாதேவ் சிவன் கோவிலுக்கு நேற்று (பிப்ரவரி 15) சென்றார்.
அங்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து சிவ தரிசனம் செய்தார். பிரார்த்தனை முடிந்த சில நிமிடங்களிலேயே மான் சோர்வு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை குன்றியது.
இதையும் படிங்க: #BREAKING: பிரபல ரவுடி வெள்ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு..! நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது துணிகரம்..!
இதையடுத்து அவரை உடனடியாக மொஹாலிக்கு அழைத்துச் சென்று போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, மான் முழுமையான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவரது உயிர்ச்சக்தி அளவுகள் (வைட்டல் பாராமீட்டர்கள்) அனைத்தும் சீராகவும் சாதாரண எல்லைக்குள் உள்ளன.

தற்போது சோர்வு (எக்ஸாஸ்டன்) காரணமாக அவதிப்படுவதால், கண்காணிப்பு மற்றும் ஆதரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலைமை நிலையானது என்றும், பல்துறை மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதனால், அவரது பாஜில்கா (Fazilka) திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. நாளை மொகா (Moga) நகரில் ஆம் ஆத்மி கட்சி நடத்த உள்ள பெரிய 'போதை ஒழிப்பு' ரேலியில் பங்கேற்க முடியாமல் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2025 செப்டம்பரில் சோர்வு, குறைந்த இதயத் துடிப்பு, வைரஸ் காய்ச்சல், எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு காரணமாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்பும் உடல்நலப் பிரச்னைகள் இருந்தன. 52 வயதான பகவந்த் மான் தீவிரமான அரசியல் பணிகள், பயணங்கள் காரணமாக உடல் சோர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் மக்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் அவரது விரைவான குணமடைவுக்கு பிரார்த்தனை செய்து வருகின்றனர். மருத்துவ அறிக்கை வெளியான பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு! பிரதமர் மோடிக்கு அழைப்பு?! கடைசியில் ட்விஸ்ட்?!