மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் கடற்படைக்கு எதிராக அமெரிக்கா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இன்று உரையாற்றிய டிரம்ப், ஈரான் விவகாரத்தில் நாங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்களிடம் ஒரு பலமான கடற்படை இருந்தது. ஆனால் இப்போது அது இல்லை. ஈரானின் ஒட்டுமொத்தக் கடற்படையும் இப்போது கடலின் அடியில் (Bottom of the sea) இருக்கிறது, எனத் தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 58 ஈரானியக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாகத் தகர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். ஈரானிடம் அணு ஆயுதம் கிடைத்தால், அவர்கள் நிச்சயமாக அதைப் பயன்படுத்துவார்கள். அதை நடக்கவிடாமல் தடுப்பதே எங்களது முக்கிய நோக்கம், என்று அவர் கூறினார். மேலும், ஈரானின் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தொடர்ந்து தீவிரமடையும் என அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: ஈரான் உளவுத்துறை அமைச்சர் பலி! இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!
ஈரான் உடனான இந்தப் போரில் அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாகக் குறிப்பிட்ட டிரம்ப், விரைவில் ஈரானில் ஒரு புதிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானியப் படைகளின் ஊடுருவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிபர் டிரம்பின் இந்த அதிரடிப் பேச்சு, சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, உலகப் பொருளாதாரத்திலும் சில மாற்றங்களை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! ஈரானின் பாசிஜ் படை தளபதி சுலைமானி கொல்லப்பட்டதாக அறிவிப்பு!