அமெரிக்க பொருளாதாரத்தில் மிகப்பெரிய நெருக்கடி உருவாக்கி வருகிறது. 2025ல் அமெரிக்காவின் தேசிய கடன் 37 ட்ரில்லியன் டாலரை தாண்டி உள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 32 லட்சம் பில்லியன் ரூபாய்க்கு சமம். இது சாதாரண எண்ணிக்கை அல்ல. உலக நீதி மையங்களை அதிர வைக்கும் அளவுக்கு மோசமான தரமான கடன் சுமை இது. இந்த கடனுக்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு ஒரு ட்ரில்லியன் டாலர் ஆகும். இதன் விளைவாக அமெரிக்க அரசுக்கு முக்கியமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது கடினமாகி வருகிறது. சமூக பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், பாதுகாப்புதுறை கல்வி மற்றும் பல அடிப்படை தேவைகள் நிதியின்றி சிக்கலுக்குள்ளாகும் நிலை உருவாக்கி உள்ளது.

ஜூன் 2025 நிலவரப்படி , அமெரிக்கா ஒரு வருடத்தில் உருவாக்கும் மொத்த பொருளாதார உற்பத்தியை விட அதிக அளவிற்கு கடனில் மூழ்கி உள்ளது. இது தொடர்ந்தால் 2055க்குள் தேசிய கடன் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எண் 156%மாக உயரும் என்று காங்கிரஸ் பட்ஜெட் அலுவழக்கம் எச்சரிக்கிறது. இந்நிலையில் ஆண்டுக்கு சுமார் இரண்டு ட்ரில்லியன் டாலர் வருமான பற்றாக்குறை ஏற்படுகிறது. செலவுகள் அதிகமாக வருமான வளர்ச்சி மந்தமாக உள்ளதால் இந்த சிக்கல் மேலும் மோசமாகிறது. இன்று அமெரிக்கா மத்திய வரி வருவாயின் ஒரு பங்குக்கு நான்கில் ஒன்று வட்டி செலவுகளுக்கே செலவாகிறது. இதனால் நாட்டு மக்கள் நம்பி எதிர்பார்க்கும் அரசு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாமல் போகிறது.

இது தொடர்ந்தால் தனியார் முதலீடு குறையும். பொருளாதார வளர்ச்சி மந்தமாகும். வேலை வாய்ப்புகள் குறையும், ஊதியங்கள் குறையும் நிலை உருவாகும். சிபிஓ கணிப்புகளின் படி இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் ஜிடிபி-யில் 340 பில்லியன் இழப்பு ஏற்படும். மேலும் 1.2 மில்லியன் வேலை வாய்ப்புகள் இல்லாமல் ஆகும். ஊதிய வளர்ச்சியும் மந்தமாகவே இருக்கும்.

இதையும் படிங்க: ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!
இதற்கிடையே வட்டி விகிதங்கள் உயர்ந்தால் டாலரின் மதிப்பு சரிந்து போகும். இதன் தாக்கம் உலக நாணய சந்தைகளில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தும். முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்தால் அமெரிக்க பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கக்கூடும். இப்போது கூட பொருளாதார வளர்ச்சி இருப்பினும் அதின் வேகம் குறைந்துவிட்டது. இந்த ஆண்டின் வளர்ச்சி வீதம் வெறும் 1.4% முதல் 1.6% மட்டுமே வேலை வாய்ப்புகள் குறைவடைந்து வருகிறது. பணவீக்கமும் இலக்கை தாண்டி உள்ளது. எரான்மஸ் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார வல்லினர்கள் இதற்கு எதிராக ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த கடன் பாதை தொடர்ந்தால் நம் பிள்ளைகளை அதற்கான விலையை கடுமையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர்கள் கூறியதை இப்போது நம்மால் நிஜமாகவே காண முடிகிறது. இது வெறும் எச்சரிக்கை அல்ல. ஒரு பெரிய நிதி நெருக்கடியின் ஆரம்ப கட்டமாகும்.
இதையும் படிங்க: முதல்முறை... நாமக்கல் டூ அமெரிக்கா.. கடல் கடந்து செல்லும் 1 கோடி முட்டைகள்..!