ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாச்சலம் அப்பன்ன சாமி கோயிலில் மூலவர்
வராஹ லட்சுமி நரசிம்ம சாமி ஆண்டில் ஒருமுறை மட்டும் சுவாமி மூலவர் அணிவிக்கப்படும் சந்தனகாப்பு நீக்கப்பட்டு நீஜ ரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனால் சிம்மாச்சலம் ஏற்கனவே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த வந்துள்ளனர். அதிகாலை ஒரு மணிக்கு சுப்ரபாத சேவையுடன் நித்ய பூஜையுடன் தொடங்கியது.

பின்னர், மூலவர் உடலில் இருந்த சந்தனக் கட்டை வெள்ளிச் கவசம் மிக நுணுக்கமாகப் பிரிக்கப்பட்டது. இதனையடுத்து நிஜ ரூபத்தில் இருந்த சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. நித்ய பூஜைகளுக்கு பிறகு, கோயிலின் பரம்பரை அறங்காவலர் பூசபதி அசோக் கஜபதிராஜு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நிஜ ரூப தரிசனம் வழங்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில், அவர்கள் முதல் சந்தனத்தை காணிக்கையாக செலுத்தினர்.

பின்னர், மாநில அரசு சார்பாக, வருவாய்த்துறை அமைச்சர் அங்கானி சத்ய பிரசாத் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சார்பில் பட்டு வஸ்திரம் வழங்கினர். இந்த நிலையில் நிஜ ரூப தரிசனத்தை காண காண வந்த பக்தர்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு சிம்மாச்சலத்தில் பலத்த மழை பெய்தது.
இதையும் படிங்க: ஹோட்டலில் மளமளவென பற்றிய தீ... இரவு முழுவவதும் மரண ஓலம்... 14 பேர் உயிரிழப்பு
பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு மேலே செல்லும் வழியில் உள்ள ஷாப்பிங் வளாகத்தில் அமைக்கப்பட்டுருந்த ₹ 300 சிறப்பு தரிசன வரிசையில் டிக்கெட் வாங்க காத்திருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் இறந்தனர். பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் அதிகாரிகளும் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, விசாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஹரேந்திர பிரசாத், காவல் ஆணையர் ஷங்கபிரதா பாக்சி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். 9 உடல்கள் விசாகப்பட்டினம் கேஜிஹெச் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: 200 தொகுதிகளில் திமுக கூட்டணியால் வெற்றி பெற முடியுமா.? பழைய ரெக்கார்டுகள் என்ன சொல்கின்றன.?