உலகளவில் சிறந்த பல்கலைக்கழகங்களை QS என்ற சர்வதேச அமைப்பு ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவின் 54 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழம் 383 ஆவது இடத்தில் இருந்து 465 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதாவது 82 இடங்களில் பின்தங்கி சென்றுள்ளது. ஐஐடி மெட்ராஸ், முதல் 200 பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த பின்னடைவிற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் தலைச்சிறந்த பல்கலைக்கழகமாகும். இது 1978 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. முதன்மை வளாகம் சென்னை கிண்டியிலும், துணை வளாகம் குரோம்பேட்டையிலும் அமைந்துள்ளது. அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது.
இதையும் படிங்க: வாய்ப்பை தவற விடாதீங்க STUDENTS! பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு..!

இந்த பல்கலைக்கழகம் 2007ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம், சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம் தரமணி, அண்ணா பல்கலைக்கழகம் மண்டல அலுவலகம் திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் மண்டல அலுவலகம் நெல்லை, அண்ணா பல்கலைக்கழகம் சென்னை மண்டல அலுவலகம் மதுரை, அண்ணா பல்கலைக்கழகம் சென்னை மண்டல அலுவலகம் கோயமுத்தூர் என நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. கிண்டி சென்னை பல்கலைக்கழகம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் படிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மாணவரின் கனவாக விளங்குகிறது.

இந்த நிலையில் துணை வேந்தர் நியமனத்தில் நிலவும் சிக்கல் தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்னடைவிற்கு காரணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இந்த துணைவேந்தர் நியமன பிரச்சினை நீண்டகாலமாகவே நீடித்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்துவிட்டது. அந்த பணியிடம் தற்போது ஆகஸ்ட் வந்தால் ஓராண்டாகவே காலியாக இருக்கிறது. புதிய துணைவேந்தர் இல்லாததால் பல்கலைக்கழகத்தின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படுவதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!