சிபிஎஸ்இ 2026 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த உள்ளது. மத்திய இடை நிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ- யில் வரும் கல்வி ஆண்டு முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும்.

மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இரண்டு கட்ட பொதுத்தேர்வில் முதல் கட்ட தேர்வை தேர்வர்கள் எழுதுவது கட்டாயம் எனவும், இரண்டாவது பொதுத்தேர்வை எழுதுவது அவர்களது விருப்பம் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு இப்படி ஒரு நிலையா? உடனே மாநில பாடத்திட்டத்தை மாற்றுங்கள்.. அன்புமணி வலியுறுத்தல்!

முதல் பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஏப்ரலிலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING: இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு... சிபிஎஸ்சி அதிரடி உத்தரவு..!