கேரளா வயநாடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை, வெள்ளரிமலை பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் சுமார் ஆயிரம் வீடுகள் தரை மட்டமாகின. இது அப்பகுதியில் நிகழ்ந்த மிக மோசமான நிலச்சரிவாக பார்க்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் பலரும் தங்கள் வீடுகளை மொத்தமாக இழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் தங்கள் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தனர். அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு பல முறை கடிதமும் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தைக் கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வயநாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவைக் கருத்தில் கொண்டு, மேலாண்மை சட்டத்தின் 13வது பிரிவின் கீழ் கடன் தள்ளுபடிக்குத் தகுதியானவையா என்பதை ஆராயுமாறு மத்திய அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்குக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அது தொடர்பாகவே மத்திய அரசும் கேரள ஐகோர்ட்டில் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை திருத்தச் சட்டத்தில் அது தொடர்புடைய பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் கடன் தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்த முடியாது என மத்திய அரசு கூறியிருக்கிறது.
இதையும் படிங்க: பிளேட்டை திருப்பிப் போடுகிறார் அமித் ஷா... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!!

மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தள்ளுபடி வழங்க முடியாது என்று மத்திய அரசு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை திருத்தச் சட்டத்தில் அது தொடர்புடைய பிரிவு நீக்கப்பட்டுள்ளதால் கடன் தள்ளுபடி செய்ய வங்கிக்கு மத்திய அரசால் அறிவுறுத்த முடியாது எனக் கூறியுள்ளது.

முன்பு இருந்த 13வது பிரிவு படி பெரிய பேரழிவுகள் ஏற்படும்போது பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தள்ளுபடி அல்லது சலுகை கடன் போன்ற நிவாரண நடவடிக்கைகளைத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அறிவிக்க முடியும். இருப்பினும், "இந்த விதி இப்போது சட்டத்தில் இல்லை" என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை இப்படி சட்டப் பிரிவுகளைக் காரணம் காட்டி அதன் பின்னால் மறைந்து கொள்ளக் கூடாது என்று கூறி கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், கடன் தள்ளுபடி செய்ய முடியுமா என்றை மூன்று வாரங்களில் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: தமிழகத்துக்கான நிதியை ஒதுக்க வேண்டும்... மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!