2006ம் ஆண்டு திண்டிவனத்தில் உள்ள வீட்டில் தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தை கொலை செய்ய முயன்றுள்ளனர். காருக்கு அடியில் புகுந்து சிவி சண்முகம் தப்பித்த நிலையில், அவரது உறவினரான முருகானந்தம் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கொலை, முயற்சி வழக்கு பதியப்பட்ட நிலையில், பாமகவை சேர்ந்த ஸ்ரீனிவாசன், குமரவேல், பிரதீபன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுபடி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு 2014 ஆம் ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 5 பேர் மரணம் அடைந்த நிலையில், எஞ்சிய 15 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 2026 மட்டுமே இலக்கு.. 2ஆம் நாளாக மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் முக்கிய ஆலோசனை!

சிபிஐ விசாரணை நடத்தப்பட்ட வழக்கில் திண்டிவனம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: அரைகுறை ஹாஸ்பிட்டல்.. வாய் பந்தா அமைச்சர்.. எங்கபோய் முடிய போகுதோ! இபிஎஸ் வார்னிங்..!