நார்த்ராப் க்ரம்மன் நிறுவனத்தின் சைனஸ் XL சரக்கு விண்கலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) இரவு 6:11 மணிக்கு (ஈடி நேரம்) புளோரிடாவின் கேப் கேனவரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இது நார்த்ராப் க்ரம்மனின் 22வது சரக்கு பயணமான NG-23 ஆகும், மேலும் முதல் முறையாக பெரிய அளவிலான சைனஸ் XL மாடலைப் பயன்படுத்தியது. இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) 11,000 பவுண்டுகளுக்கும் (சுமார் 5000 கிலோ) மேலான அறிவியல் பொருட்கள், உணவு, உபகரணங்கள் மற்றும் பரிசோதனை பொருட்களை ஏற்றிச் சென்றது, இது வணிக சரக்கு விண்கலங்களில் இதுவரை இல்லாத அதிக எடையாகும்.
இதையும் படிங்க: நாசாவில் சீனர்களுக்கு தடை: விண்வெளி போட்டியில் புதிய திருப்பம்..!
இருப்பினும், நேற்று அதிகாலை நடந்த இரண்டு orbit-raising burns-இல், விண்கலத்தின் முக்கிய இன்ஜின் திட்டமிட்ட நேரத்திற்கு முன் நின்று விட்டது. இதனால், ISS-இல் திட்டமிட்டபடி (செப்டம்பர் 17) இன்று காலை வருகை ரத்து செய்யப்பட்டது. நாசா அறிக்கையின்படி, விண்கலத்தின் மற்ற அமைப்புகள் சரியாக செயல்படுகின்றன, ஆனால் இன்ஜின் பிரச்சினை காரணமாக சந்திப்பு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையின் சரியான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. தரைக்கட்டுப்பாட்டு குழுக்கள் மாற்று திட்டங்களை ஆராய்ந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளது.
விண்கலத்தில் உள்ள சிறிய ரியாக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (ஆர்சிஎஸ்) த்ரஸ்டர்களைப் பயன்படுத்தி படிப்படியாக சுற்றுப்பாதையை உயர்த்துவது ஒரு சாத்தியமான வழி, ஆனால் இதன் சாத்தியக்கூறு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. புதிய சந்திப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைனஸ் XL இன் சரக்குகளில் புதிய உணவு, உயிரியல் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்கான வன்பொருள், ஐஎஸ்எஸ்-இன் சிறுநீர் செயலாக்கி மற்றும் கழிவறைக்கான உதிரிப்பொருட்கள், விடுமுறை உணவுகள் ஆகியவை அடங்கும்.
இது முந்தைய சைனஸ் மாடல்களை விட 5.2 அடி (1.6 மீட்டர்) நீளமானது, 33 சதவீதம் அதிக சரக்கு திறன் கொண்டது. முந்தைய சைனஸ் விண்கலம் ஐரோப்பாவிலிருந்து போக்குவரத்தின் போது சேதமடைந்ததால், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. சைனஸ் விண்கலம் ஐஎஸ்எஸ்-இன் கனடியன் ரோபோடிக் ஆர்ம் மூலம் பிடிக்கப்பட்டு யூனிட்டி மாட்யூலுக்கு இணைக்கப்படும், இது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் போன்று தானியங்கி இணைப்பு அல்ல.

ஆறு மாதங்கள் வரை நிலையத்தில் இருந்து, குப்பைகளை ஏற்றி பசிபிக் பெருங்கடலில் அழிக்கப்படும். இந்த தாமதம் ஐஎஸ்எஸ் செயல்பாடுகளை பாதிக்கலாம், குறிப்பாக கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு. நார்த்ராப் க்ரம்மன் நாசாவுடன் இணைந்து சைனஸ் XL-ஐ மேம்படுத்தியது, இது அதிக அளவு நைட்ரஜன், ஆக்சிஜன், உணவு போன்றவற்றை வழங்க உதவுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் 32 டிராகன் பயணங்களையும், நார்த்ராப் 20 சைனஸ் பயணங்களையும் வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த சம்பவம் விண்வெளி பயணங்களின் சவால்களை நினைவூட்டுகிறது. மேலும் இது வணிக விண்வெளி துறையின் சவால்களையும், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் முக்கிய பங்கையும் வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: யுரேனஸின் 29வது துணைக்கோள் கண்டுபிடிப்பு.. விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்..!