இஸ்ரேல் ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக உலகளவில் எரிப்பொருள் தந்தையில் குழப்பம் நிலவி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே உருவாகி உள்ளது. இந்த பயத்தினால்தான் சில இடங்களில் மக்கள் தேவைக்கு அதிகமாக எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் நிலைமை கொஞ்சம் வேற மாதிரி இருக்கிறது. சாதாரணமாக அங்கு ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் சிலிண்டர்கள் மட்டுமே புக் செய்யப்படும். ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை திடீரென ஒன்றரை லட்சம் வரை உயர்ந்துள்ளது.
அதாவது வழக்கத்தை விட பலர் கூடுதலாக சிலிண்டர் முன்பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி மக்கள் தேவைக்கு அதிகமாக முன்பதிவு செய்ய ஆரம்பித்தால் உண்மையில் சிலிண்டர் கிடைக்கும் போது பிரச்சனை இல்லாவிட்டாலும் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்ட மாதிரி நிலைமை உருவாகலாம் என்று அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள். அதனால்தான் எண்ணெய் நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. அதன்படி, கொல்கத்தாவில் ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு, மற்றொரு சிலிண்டரை முன்பதிவு செய்ய 21 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாட்னாவிலும் இதே மாதிரி விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு, 15 முதல் 25 நாட்கள் கழித்துதான் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய நாயில் கார்பரேஷன் நிறுவனத்தின் பொது மேலாளர் கேஎம் தாக்கூர் ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறுவதாவது, தற்போது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்று எந்த பிரச்சனையும் இல்லை. பொதுமக்கள் தேவையில்லாமல் பதற்றப்பட வேண்டாம்.
இதையும் படிங்க: வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடா..?? வீட்டு உபயோக சிலிண்டர் மீதே கவனம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??
வழக்கம் போலவே முன்பதிவு செய்தால் போதும். அதிக அளவில் சிலிண்டர்கள் புக் செய்து சேமித்து வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார். அதாவது பயந்து தேவைக்கு அதிகமாக சிலிண்டர் வாங்க ஆரம்பித்தால் தான் பிரச்சனை உருவாகும் என்பதால் மக்கள் அமைதியாக இருந்து வழக்கம் போல பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: வாசல் வரை வந்த போர்... விடிந்ததுமே இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி... சிலிண்டர் விலை அதிரடி உயர்வு...!