கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 41 வயதான தீபக் என்பவர், சமூக வலைதளத்தில் வைரலான ஒரு வீடியோவால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.தீபக் கொழிக்கோட்டின் கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர். ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார்.
அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த வெள்ளியன்று அவர் வேலை சம்பந்தமாக கண்ணூர் நோக்கி பேருந்தில் பயணித்தார். அப்போது, பயணியான சிம்ஜிதா முஸ்தபா என்ற பெண், தீபக் தன்னை பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டதாகக் குற்றம்சாட்டி ஒரு சிறு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ வைரலாகி 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது.

இதனால் தீபக் மீது கடுமையான ஆன்லைன் தாக்குதல்கள், அவதூறுகள், தரப்பு விமர்சனங்கள் எழுந்தன. வீடியோ வெளியான சில நாட்களிலேயே தீபக் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவை பார்வையிட்ட பலரும் தற்செயலாக நடந்த செயல் என்பது போல தான் தோன்றுகிறது என்றும் அப்பாவி ஒருவரின் உயிர் போக காரணமான அந்த பெண் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டால் உயிரை மாய்த்துக்கொண்ட நபர்... ரீல்ஸ் பெண் தலைமறைவு.. தேடுதல் வேட்டை தீவிரம்..!
தீபக் தற்கொலை சம்பவம் குறித்து கேரள போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஷம்ஜிதா என்ற பெண்ணை தேடி வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பெண் தலைமறைவாக இருந்த நிலையில் கேரள போலீசார் அதிரடியாக இன்று கைது செய்துள்ளனர். உண்மை நிலவரம் என்ன என்பது தொடர்பாகவும் அவ்வாறு வீடியோ வெளியிட்டதன் நோக்கம் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..!