• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, November 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முஸ்லிம் கணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! குரானை சுட்டிக்காட்டி செக் வைத்த ஹைகோர்ட்!

    முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய முடியாது என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    Author By Pandian Thu, 06 Nov 2025 13:03:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala HC Bombshell: No Second Marriage Registration for Muslim Men Without First Wife's Consent - Women's Rights Triumph!

    கேரளாவின் கண்ணூர் அருகே உள்ள கருமத்துார் பகுதியைச் சேர்ந்த முகமது ஷெரீப் (44) தனது இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய முயன்றபோது, முதல் மனைவியின் சம்மதம் இன்றி அது சாத்தியமில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, முஸ்லிம் தனிப்பட்ட சட்டத்தை அரசியலமைப்பு உரிமைகளுக்கு அடிப்படையாக வைத்து விளக்கியுள்ளது. 

    "மதம் இரண்டாம் இடம் பட்சம் தான். அரசியலமைப்பு உரிமைகள் தான் முதலில்" என்று நீதிபதி பி.வி. குஞ்சுகிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார். இது முஸ்லிம் பெண்களின் உரிமைகளை வலுப்படுத்தும் படியாகவும், பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

    இந்த வழக்கின் தொடக்கம் 2017-ல் நடந்தது. காசர்கோடு சேர்ந்த ஆபிதா (38) என்பவரை ஷெரீப் இரண்டாவது திருமணம் செய்தார். ஆனால், அவரது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை. இதனால், திருக்கரிப்பூர் பஞ்சாயத்து செயலர் இரண்டாவது திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்தார். இதை எதிர்த்து ஷெரீப் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். "முஸ்லிம் தனிப்பட்ட சட்டத்தின்படி, ஒரு ஆண் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்யலாம். எனவே எனது திருமணத்தைப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று அவர் வாதிட்டார். ஆனால், நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை.

    இதையும் படிங்க: குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமா தெரியலையா? சிதைந்து பள்ளிகளை சீரமைக்க சீமான் வலியுறுத்தல்...!

    நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் தனது தீர்ப்பில் (அக்டோபர் 30) கூறியது: "அரசியலமைப்பு சட்டம் இருபாலினருக்கும் சம உரிமை அளிக்கிறது. ஆண்களுக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் இல்லை. முதல் திருமணம் இன்னும் செல்லுபடியாக இருக்கும்போது, 99.99 சதவீத முஸ்லிம் பெண்கள் இரண்டாவது திருமணத்தை ஏற்க மாட்டார்கள்.

    " திருமணப் பதிவு விண்ணப்பத்தில் வேறு மனைவி இருந்தால் அவரது விவரங்களை குறிப்பிட வேண்டும் என்றும், முஸ்லிம் சட்டத்தின்படி இரண்டாவது திருமணம் செய்யலாம் என்றாலும், அதைப் பதிவு செய்ய முதல் மனைவியின் சம்மதம் அல்லது குறைந்தபட்சம் அறிவிப்பு அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

    FirstWifeConsent

    "குர்ஆன் அல்லது முஸ்லிம் சட்டம், முதல் மனைவியின் அறிவின்றி இரண்டாவது திருமணத்தை அனுமதிக்கவில்லை. இது வெளிப்படையான திருமானம் அல்ல, மறைமுக உறவாக மாறிவிடும்" என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், திருமணப் பதிவு செயலர் முதல் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது கருத்தை கேட்க வேண்டும். அவர் எதிர்ப்பு தெரிவித்தால், பதிவு செய்யக்கூடாது. அது செல்லுபடியில்லை என்றால், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.

    "முஸ்லிம் ஆண் இரண்டாவது திருமணம் செய்யலாம், ஆனால் பதிவு செய்யும்போது நாட்டின் சட்டம் மேலானது. முதல் மனைவி அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க முடியாது" என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. ஷெரீப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீண்டும் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகி, முதல் மனைவியின் கருத்தை கேட்ட பிறகு திருமணம் பதிவு செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டது.

    இந்தத் தீர்ப்பு முஸ்லிம் சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் சிலர் "பெண்கள் உரிமைகளுக்கு வலுவான படி" என்று வரவளைத்துள்ளனர். மற்றொரு தரப்பு, "மத சட்டங்களை அரசியலமைப்பு மீறக் கூடாது" என்று விமர்சித்துள்ளனர். 

    கேரள உயர் நீதிமன்றம் ஏற்கனவே செப்டம்பரில், "முஸ்லிம் ஆண் இரண்டாவது மனைவியை பராமரிக்கும் திறன் இன்றி திருமணம் செய்ய முடியாது" என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புகள், யூனிஃபார்ம் சிவில் கோட் (UCC) விவாதத்தை மீண்டும் கொந்தளிக்கின்றன. முஸ்லிம் பெண்கள் அமைப்புகள், "இது நமது உரிமைகளை பாதுகாக்கும் முதல் படி" என்று பாராட்டியுள்ளன. கேரளாவின் இந்தத் தீர்ப்பு, மற்ற மாநிலங்களிலும் திருமணப் பதிவு விதிகளுக்கு வழிகாட்டியாகலாம்.
     

    இதையும் படிங்க: மூளையை தின்னும் அமீபா கோரம்! கதி கலங்கும் கேரளா! 5 நாளில் 4 பேர் பலி!

    மேலும் படிங்க
    பணப் பறிப்பே பாஜகவின் கொள்கை... மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம்...!

    பணப் பறிப்பே பாஜகவின் கொள்கை... மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம்...!

    தமிழ்நாடு
    பணமோசடி வழக்கு! பிடியை இறுக்கும் ED! அனில் அம்பானிக்கு 2வது முறையாக நோட்டீஸ்!

    பணமோசடி வழக்கு! பிடியை இறுக்கும் ED! அனில் அம்பானிக்கு 2வது முறையாக நோட்டீஸ்!

    இந்தியா
    தென் ஆப்பிரிக்காவை கரித்து கொட்டும் ட்ரம்ப்!! ஜி 20 உச்சிமாநாடு புறக்கணிப்பு!! அதிபர் சொல்லும் காரணம்?!

    தென் ஆப்பிரிக்காவை கரித்து கொட்டும் ட்ரம்ப்!! ஜி 20 உச்சிமாநாடு புறக்கணிப்பு!! அதிபர் சொல்லும் காரணம்?!

    உலகம்
    ஹை அலர்ட்டில் பரமக்குடி... அனுமதியின்றி குவிந்த 220 பேரைக் குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்...!

    ஹை அலர்ட்டில் பரமக்குடி... அனுமதியின்றி குவிந்த 220 பேரைக் குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!

    ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!

    தமிழ்நாடு
    மோடியின் Skincare Routine!! ஹர்லீன் தியோல் கேள்விக்கு பிரதமர் கொடுத்த ரிப்ளை!!

    மோடியின் Skincare Routine!! ஹர்லீன் தியோல் கேள்விக்கு பிரதமர் கொடுத்த ரிப்ளை!!

    இந்தியா

    செய்திகள்

    பணப் பறிப்பே பாஜகவின் கொள்கை... மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம்...!

    பணப் பறிப்பே பாஜகவின் கொள்கை... மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம்...!

    தமிழ்நாடு
    பணமோசடி வழக்கு! பிடியை இறுக்கும் ED! அனில் அம்பானிக்கு 2வது முறையாக நோட்டீஸ்!

    பணமோசடி வழக்கு! பிடியை இறுக்கும் ED! அனில் அம்பானிக்கு 2வது முறையாக நோட்டீஸ்!

    இந்தியா
    தென் ஆப்பிரிக்காவை கரித்து கொட்டும் ட்ரம்ப்!! ஜி 20 உச்சிமாநாடு புறக்கணிப்பு!! அதிபர் சொல்லும் காரணம்?!

    தென் ஆப்பிரிக்காவை கரித்து கொட்டும் ட்ரம்ப்!! ஜி 20 உச்சிமாநாடு புறக்கணிப்பு!! அதிபர் சொல்லும் காரணம்?!

    உலகம்
    ஹை அலர்ட்டில் பரமக்குடி... அனுமதியின்றி குவிந்த 220 பேரைக் குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்...!

    ஹை அலர்ட்டில் பரமக்குடி... அனுமதியின்றி குவிந்த 220 பேரைக் குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்...!

    தமிழ்நாடு
    ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!

    ரூ. 20 லட்சம் வரை வைப்புத் தொகை... ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைக்கான பரிந்துரை வெளியீடு...!

    தமிழ்நாடு
    மோடியின் Skincare Routine!! ஹர்லீன் தியோல் கேள்விக்கு பிரதமர் கொடுத்த ரிப்ளை!!

    மோடியின் Skincare Routine!! ஹர்லீன் தியோல் கேள்விக்கு பிரதமர் கொடுத்த ரிப்ளை!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share