காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் மக்கள் வாழும் பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் பல இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பழித்தீர்க்கும் விதமாக இந்தியா பாகிஸ்தானின் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்கியது. தொடர்ந்து பாகிஸ்தானும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அதனை இந்தியா தகர்த்து எறிந்த நிலையில், இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அடிபணிந்தது பாகிஸ்தான். இவ்வளவு நிகழ்ந்தும், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டும், பகல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் ஆறு பேர் பிடிபடவில்லை.
இதையும் படிங்க: இபிஎஸ் மகனை காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணி? அந்தர் பல்டி அடித்த ஜெயக்குமார்..!

இதனை சுட்டிக்காட்டி சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பயங்கரவாதிகளும் பிடிப்படாமல் இருப்பதற்கு காரணம், ஒரு நாள் பாஜக அலுவலகத்தில் இருந்து, அந்த ஆறு பேரும் தங்கள் கட்சியில் சேர்ந்ததாக கூறும் செய்தி குறிப்பு வரக்கூடும் என்பதால் தான்...என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
இதையும் படிங்க: வாயை திறந்தாலே பொய்.. இவருக்கு இதே வேலை தான்! முக்கிய புள்ளியை சாடிய முதல்வர்..!