2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுகவும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுகவும் தீவிரமாக களமாடி வருகின்றன.
என்னதான் செல்வாக்கு நிறைய கட்சியாக இருந்தாலும் பாஜகவால் தமிழகத்தில் உறுதியாக காலூன்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசியல் களம் என்பது பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துவிட்டது. இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி உள்ளிட்டகை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி உடன் அவர் ஆலோசித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று அவர் சந்தித்து இருந்தார். இந்த நிலையில்,
இதையும் படிங்க: 234 தொகுதிகளிலும் பயிலரங்கம்… வெற்றிக்கான அடித்தளம்… நயினார் நாகேந்திரன் உறுதி…!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று இரவு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளார். டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடனான பேச்சுவார்த்தை குறித்து அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தென்னை விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு... நன்றி சொன்ன நயினார்...!