குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து நேற்று லண்டனுக்கு டேக் ஆப் ஆன ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில், மருத்துவக்கல்லூரி கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவரை தவிர 241 பேர் இறந்தனர். விமானம் விழுந்த கட்டடத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் உடல் கருகினர். இதனால், பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.
காயம் அடைந்த பயணி உள்ளிட்டோர் ஆமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஆமதாபாத் வந்த பிரதமர் மோடி, விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர், விபத்து மற்றும் மீட்பு பணிகள் பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

ஆமதாபாத் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பிய ஒரே பயணி விஷ்வாஸ் குமாரிடமும் மோடி உடல் நலம் விசாரித்தார். அப்போது விபத்தில் இருந்து தாம் தப்பியது பற்றி விஷ்வாஸ் அவரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த விமான விபத்தில் அதிர்ஷ்டவசமா உயிர்தப்பியது 2 பேர் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கற்பனை செய்ய முடியாத துயரம்! இதயத்தை உடைக்கும் வலி.. நொறுங்கிப் போன பிரதமர் மோடி..!
ஒருவர் விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ் குமார். மற்றொருவர் அந்த விமானத்தை தவற விட்ட பெண் பூமி சவுஹான். விமானத்தில் சென்ற விஸ்வாஸ் குமார் அவசரகால கதவு பக்கத்தில் இருக்கும் 11ஏ சீட்டில் சென்றார். விமானம் கீழே விமானம் கீழே விழுந்து வெடிப்பதற்கு ஓரிரு நெடிகள் முன் அவசரகால கதவு வழியாக கீழே குதித்து உயிர் தப்பி இருக்கிறார். பூமி கவுகான் என்ற பெண் ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் செல்வதற்காக டிக்கெட் புக் செய்து இருந்தார்.

விமானத்தை பிடிப்பதற்காக ஏர்போர்ட் சென்று கொண்டு இருந்தார். ஆனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஏர்போர்ட் செல்வதற்கு 10 நிமிடம் தாமதம் ஆனது. அதற்குள் அவர் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு விட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே அது கீழே விழுந்து வெடித்து சிதறியது. அந்த விமானத்தை தவற விட்ட பூமி சவுகானுக்கு அது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் கூறும்போது,

விபத்தை அறிந்து என் உடல் அப்படியே நடுங்கிபோய்விட்டது. விமானத்தில் சென்றவர்கள் இறந்தை அறிந்து உடைந்து போய்விட்டேன். என்னால் பேசகூட முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் உயிர் தப்பி இருக்கிறேன். அதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் அதிர்ச்சியுடன் பூமி சவுகான் கூறினார். லண்டனில் கணவருடன் வசிக்கும் பூமி, 2 வருடங்களுக்கு பிறகு விடுமுறைக்காக இந்தியா வந்துவிட்டு திரும்பி லண்டன் செல்ல இருந்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கற்பனை செய்ய முடியாத துயரம்! இதயத்தை உடைக்கும் வலி.. நொறுங்கிப் போன பிரதமர் மோடி..!