பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணம் வடக்கு வாஜிரிஸ்தான் மாவட்டத்தில் ஜூன் 28ம் தேதி நடந்த பயங்கர குண்டு வெடிப்பு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணுவ வாகனங்கள் அணி வகுத்து சென்று கொண்டிருந்தன. திடீரென சரக்கு வாகனம் ஒன்று வந்து, ராணுவ வாகனங்கள் மீது மோதியது. அப்போது தான் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ராணுவ வாகனங்கள் சிதறின. பக்கத்தில் இருந்த 2 வீடுகளும் இடிந்து விழுந்தன.
இந்த குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். அப்பாவி மக்கள் 19 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவரும் இறந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் இது தற்கொலை படை தாக்குதல் என்பது தெரிந்தது. இந்த தாக்குதலுக்கு ஹபிஸ் குல் பஹதூர் அமைப்பின் தற்கொலை படை பிரிவு பொறுப்பேற்றது.
இதையும் படிங்க: கனடாவுக்கு வேலைக்கு வர்றீங்களா? சோலி முடிஞ்சுது! இந்திய பெண் இன்ஸ்டாவில் வார்னிங்.!

இது தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான்களின் ஒரு கிளை பிரிவாகும். தற்கொலை படையாக சென்றவர் சரக்கு வாகனங்கள் முழுதும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டு, ராணுவ கான்வாய் மீது மோதி வெடிக்க வைத்தார்.
இதில் தான் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 13 வீரர்கள் இறந்ததோடு, காயம் அடைந்த 10 வீரர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 6 குழந்தைகள் உள்பட 29 பேர் காயமடைந்த நிலையில், 4 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் கிளைப்பிரிவான ஹஃபிஸ் குல் பஹதூர் எனும் ஆயுதப் படையின் தற்கொலைப் படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் ஒரு கிளை பிரிவாகும். தெஹ்ரீக்-இ-தலிபான்களை பாகிஸ்தான் தலிபான்கள் என்றும் அழைக்கின்றனர். இவர்கள் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலை பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தலிபான்களும் ஆப்கனை ஆட்சி செய்யும் தலிபான்களும் வேறு வேறு அமைப்பினர் என்றாலும், இரண்டுமே நட்பு அமைப்புகள் தான். ஆப்கனில் எப்படி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தலிபான்கள் துடித்தார்களோ, அதே போல் பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது பாகிஸ்தான் தலிபான்களின் கனவு. பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் ராணுவமும் தான் பாகிஸ்தான் தலிபான்களின் எதிரிகள். இவர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு இந்தியா மீது அந்த நாடு அபாண்ட பழி போட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஏவி விடுவதாக குற்றம் சாட்டி உள்ளது. பாகிஸ்தானின் இந்த வாய்க்கொழுப்பை இந்தியா கண்டித்துள்ளது. வஜிரிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம் சாட்டி பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

எந்த அடிப்படையும் இல்லாத இந்த குற்றச்சாட்டை இந்தியா நிராகரிக்கிறது. அபாண்ட குற்றம் சாட்டும் பாகிஸ்தானை இந்தியா கண்டிக்கிறது என்று நம் வெளியுறவுத்துறை கூறி உள்ளது. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஏவி விடும் பாகிஸ்தானில் தினமும் பயங்கரவாத ஏதாவது ஒரு ரூபத்தில் பயங்கரவாத தாக்குதல் நடக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 260 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.
பலூச் விடுதலை ராணுவமும், பாகிஸ்தான் தலிபான்களும் அந்த நாட்டுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. அவர்களை தடுக்க முடியாத பாகிஸ்தான், சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக அபாண்ட குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவை உலுக்கிய 3 பயங்கரவாத தாக்குதல்..! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ISIS தலைவன் காலி.. யார் இந்த சாகிப் நாச்சன்?