பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 1) ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு முக்கிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது ரூ.17,900 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் அவர் உள்ளார். இந்தப் பயணம் இரு மாநிலங்களிலும் உள்கட்டமைப்பு, தொழில், போக்குவரத்து மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி, மாநிலத்தின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச இணைப்புகளை மேம்படுத்துவதோடு, சுற்றுலா, வர்த்தகம், முதலீடு மற்றும் ஆராய்ச்சி துறைகளின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், பல்வேறு புதிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார். இந்தத் திட்டம் மாநிலத்தில் உயர் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

அதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் மைசூரு நகரில் அமைக்கப்பட்டுள்ள 'விவேக ஸ்மரகா' – சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 1892-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் மைசூருக்கு மேற்கொண்ட வரலாற்றுப் பயணத்தை நினைவுகூரும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் நவீன வகுப்பறைகள், நூலகம், யோகா மற்றும் தியான மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இளைஞர்களின் திறன் மேம்பாடு, ஆளுமை வளர்ச்சி மற்றும் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் மையமாக இது செயல்படும் என்று பிரதமர் மோடி தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் தொழில், கல்வி, சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் புதிய முன்னேற்றம் ஏற்படும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!