சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாடு உலக அரசியலில் பெரிய சரவெடியை ஏற்படுத்தியிருக்கு. நேற்று (ஆகஸ்ட் 31, 2025) தொடங்கிய இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் ஒன்றுகூடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பு அழுத்தங்களுக்கு எதிரா ஒருமித்த கருத்தை வெளியிட்டிருக்காங்க.
இது வெறும் சந்திப்பா? இல்லை, ட்ரம்பின் தாராளமான வர்த்தகப் போருக்கு எதிரா உலகின் புதிய ஒழுங்கை உருவாக்கும் முயற்சி! புதின் செய்தியாளர்கள் சந்திப்பில் "பாரபட்சமான சமூக பொருளாதார தடைகளுக்கு எதிரா சீனாவும் ரஷ்யாவும் ஒருமித்த கருத்தில் இருக்கோம்"னு சொன்னது, ட்ரம்பை நேரடியா சீண்டும் ஒரு தைரியமான அறிவிப்பு.
SCO 2001-ஆம் ஆண்டு சீனா, ரஷ்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட ஆறு ஐரோப்பிய-ஆசிய நாடுகளால் தொடங்கப்பட்டது. இப்போ 10 உறுப்பு நாடுகள் – இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் உட்பட – மற்றும் 16 பார்வையாளர் நாடுகள் இருக்கு. இந்த மாநாடு SCO-வின் மிகப்பெரியது, 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள், ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஏசியான், காமன்வெல்த் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு ஆப்படிக்க தயாராகும் கூட்டணி!! இந்தியா, ரஷ்யா, சீனா தலைவர்கள் ஒற்றுமை!
தியான்ஜின் மெய்ஜியாங் கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் இது, பாதுகாப்பு, பயங்கரவாதம், பொருளாதார ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு பற்றிய விவாதங்களுக்கு மாறியிருக்கு. சீனா இதை "புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் முக்கிய சக்தி"னு விவரிக்கிறது.
பிரதமர் மோடி 2018-க்குப் பிறகு முதல் முறையா சீனாவுக்கு வந்திருக்கார். ஜின்பிங் தானா விமான நிலையத்தில் வரவேற்றார். மோடி நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலி, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், மியான்மர் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லெயிங், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ, தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான், கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் உள்ளிட்டவர்களை சந்திச்சு வர்த்தகம், பாதுகாப்பு, இணைப்பு பற்றி பேசினார்.

மோடி-ஜின்பிங் சந்திப்பில் "இந்தியா-சீனா போட்டியாளர்கள் இல்லை, துணைவர்கள்"னு சொல்லி, எல்லை அமைதி, வர்த்தகம் அதிகரிப்பு, விசா ஈச், நேரடி பிளைட்கள் மீண்டும் தொடங்குதல் பற்றி ஒப்பந்தம். மோடி 2026 BRICS உச்சி மாநாட்டுக்கு ஜின்பிங்கை அழைச்சார், சீனா ஆதரவு தெரிவிச்சது.
இன்று (செப்டம்பர் 1) புதின் சீனா வந்ததும், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். "உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் நிதி திரட்டலில் சீனா-ரஷ்யா சேர்ந்து வேலை செய்யுது. உலக சவால்களுக்கு BRICS திறனை வலுப்படுத்துவோம். பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வளர்ச்சியைத் தடுக்கும் பாரபட்சமான தடைகளுக்கு எதிரா ஒருமித்த கருத்து"னு சொன்னார்.
இது ட்ரம்பின் 50% வரி (இந்தியாவுக்கு), 200% அச்சுறுத்தல் (சீனாவுக்கு), உக்ரைன் போர் சான்க்ஷன்கள் (ரஷ்யாவுக்கு) எதிரானது. புதின் சீனாவுடன் வர்த்தகம் 2021-க்குப் பிறகு 100 பில்லியன் டாலர் அதிகரிச்சதா சொன்னார், IMF, உலக வங்கி சீர்திருத்தம், டாலர் சார்பில்லா புதிய நிதி அமைப்பு பற்றி பேசினார். "நியோ-காலனியலிசத்துக்கு எதிரா BRICS உலக பெரும்பான்மையின் நலனுக்காக வேலை செய்யும்"னு அவர் சொன்னது, ட்ரம்பை நேரடியா சீண்டும் விஷயம்.
ட்ரம்பின் வர்த்தகப் போர் இந்தியா-சீனா உறவை மீண்டும் இணைக்க வைச்சிருக்கு. 2020 கல்வான் மோதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட உறவு இப்போ தொடக்கம் கண்டுருக்கு. இந்தியா அமெரிக்காவுடன் சமநிலை வைத்துக்கிட்டு, ரஷ்யா-சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது.
SCO மூலம் BRICS விரிவாக்கம், ஆற்றல் வர்த்தகம், பயங்கரவாதத்துக்கு எதிரா ஒற்றுமை – இவை விவாதிக்கப்படும். மோடி உரையில் "பிராந்திய ஒத்துழைப்பு" பற்றி பேசுவார். தியான்ஜின் டிக்ளரேஷன், SCO 10 வருஷ திட்டம் வெளியாகும். ஆனா, இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினை, ரஷ்யா-உக்ரைன் போர், ஈரான் அணு திட்டம் – இவை சவால்கள். சீனா இதைப் பயன்படுத்தி ஐரோப்பா-ஆசியாவில் செல்வாக்கை அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு ஆப்படிக்க தயாராகும் கூட்டணி!! இந்தியா, ரஷ்யா, சீனா தலைவர்கள் ஒற்றுமை!