காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

அதேசமயம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து, உலக நாடுகளிடம் விளக்குவதற்காக, அனைத்து கட்சி எம்பிக்கள் குழு 33 நாடுகளில் பயணம் மேற்கொண்டது. காங்., எம்பி சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளின் எம்பிக்கள், அரசு பிரதிநிதிகளை சந்தித்து விளக்கினர். சுற்றுப் பயணம் முடித்து நாடு திரும்பிய சசி தரூர், தங்கள் அனுபவம் மற்றும் சுற்றுப் பயணத்தின் பலன் குறித்து விளக்கினார்.
இதையும் படிங்க: சசி தரூர் செய்த மேஜிக்! பாக்., தலையில் இறங்கிய இடி! யூடர்ன் அடித்த கொலம்பியா!!
நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக, கொலம்பியா நாட்டில் எங்கள் குழு செய்த செயல் குறிப்பிடத்தக்கது. நம் எம்பிக்கள் குழு அங்கு செல்லும் வரை, பாகிஸ்தான் மீதான அவர்களின் நிலைப்பாடு வேறாக இருந்தது.

ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையில் பலியான பாகிஸ்தான் தரப்பில் பலியானோருக்கு அவர்கள் இரல்கல் தெரிவித்திருந்தனர். அவர்களின் அரசு குறிப்பிட்டேல் ஏறக்குறைய 15 நாட்களுக்கும் மேலாக இடம் பெற்றிருந்து அந்த இரங்கல் குறிப்பு, எங்கள் விளக்கத்திற்கு பின் நீக்கப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை நாங்கள் தெளிவாக விளக்கினோம். நாங்கள் சொன்னதை கொலம்பியா அரசு பிரதிநிதிகள் பொறுமையுடன் கேட்டறிந்தனர்.
அதன் பின், அவர்களின் நிலைப்பாடு முற்றிலும் மாறியது. இது நம் குழுவின் நடவடிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. பயங்கரவாதத்திற்கு எதிரான நம் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை மிகச் சிறந்தது.

அனைத்து கட்சி எம்பிக்களும் இடம் பெற்றதால், இது இந்தியாவின் ஒற்றுமையை விளக்கியது. நாங்கள் சென்ற அனைத்து நாடுகளிலும், எங்கள் நிலைப்பாட்டை புரிய வைத்தோம். பல நாடுகளின் அதிபர்கள், துணை அதிபர்கள், பிரதமர்கள், எம்பிக்கள், அரசு பிரதிநிதிகளை சந்தித்தில் மகிழ்ச்சி, குறிப்பாக, அமெரிக்க துணை அதிபர் வானசை சந்தித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.
மொத்தத்தில் வெளிநாடுகளுக்கு சென்ற அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவின் நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளது. நாடு திரும்பிய எம்பிக்களை, பிரதமர் மோடி சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக எனக்கு அழைப்பு வந்துள்ளது.
இது பார்மல் மீட்டிங்காக இல்லாமல், எங்கள் சுற்றுப்பயண அனுபவம் குறித்து எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சந்திப்பாக இருக்கும் என நம்புகிறேன். நாடு திரும்பிய அனைத்து எம்பிக்கள் குழுவினருடனும் இந்த சந்திப்பு நிகழும் என நினைக்கிறேன் என, சசி தரூர் கூறினார்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு கரிசனம் காட்டிய கொலம்பியா.. கொதித்தெழுந்த சசிதரூர்.. தெறிக்கவிடும் பேச்சு..!