சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இயல்பாக ஜூன் 1-ம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை 4 நாட்கள் தாமதமாக ஜூன் 4-ம் தேதி தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான நிலை உருவாகியுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 31) மழை எங்கு?
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: தென்மேற்கு பருவமழை குறையும்! ஜூனில் வெப்பஅலை தாக்கும்! தமிழகத்தை எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!
ஜூன் 1, 2 மற்றும் 3
மேற்குறிப்பிட்ட அதே மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. மழைப்பொழிவு படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூன் 3-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பருவமழை தொடங்குவது நல்ல செய்தியாகப் பார்க்கப்படுகிறது. மழைக்காலத்தை முன்னிட்டு மக்கள் மின்னல் தாக்குதல், வலுவான காற்று மற்றும் வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும், நல்ல மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பலத்த காற்றுடன் அடித்து ஊற்றக் காத்திருக்கும் பேய்மழை!! 8 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்!!