கரூர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் விஜய், தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க கூடாது என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த போது பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இறுதியாக, தங்கள் தரப்பில் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறுவதாக திமுக தகவல் தெரிவித்துள்ளது.
மனுவை வாபஸ் பெற அனுமதித்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுவை சரியாக தயாரித்து தேவையான நிவாரணங்களை பெற்றுக் கொள்ளுங்கள் என்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கரூர் வழக்கில் முதல்வர் விஜயை முதல் குற்றவாளி என்று கூறுவது ஏற்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்யை குற்றம் சாட்டப்பட்ட நபர் என திமுக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் கூறிய போது நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக எங்கும் சேர்க்கப்படவில்லை என்றும் ஆவணங்களை சரியாக படித்துப் பார்த்து பேசுங்கள் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர். உங்களுடைய சண்டைகளை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!
மேலும் முதல்வர் விஜய் கரூர் செல்வதை தற்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை என்பது தெரிய வருகிறது. முதல்வரின் கரூர் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கு விரும்புகிறீர்களா என்று திமுக தரப்பிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நிவாரணம் அளிக்க குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறான கருத்து உருவாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்த நிலையில் தங்களது மனுவை வாபஸ் பெறுவதாக திமுக தரப்பு தெரிவித்தது. திமுக மனுவை வாபஸ் பெற்ற நிலையில் முதல்வர் விஜய் கரூர் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை என்பதும் விரைவில் அவர் கரூர் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விபத்து காப்பீடு புதிய உத்தரவு... பெண்களுக்கு கைகொடுத்த உச்சநீதிமன்றம்...!