காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.

இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: இன்னமும் நீடிக்கும் ரெட் அலர்ட்.. மக்களுக்கு பறந்த உத்தரவு.. ஜம்மு - காஷ்மீரின் தற்போதைய நிலை தெரியுமா?
எனினும் இன்னமும் ஆப்ரேஷன் சிந்தூர் முடிவடைய வில்லை. பயங்கரவாதத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஊடுருவி இந்தியாவிற்கு எதிரான சதித்திட்டங்களில் ஈடுபடுவோர்கல் கண்டறியப்பட்டு களை எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் பல சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில் ஒரு நபர் பலத்த காயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், வெடிகுண்டை அந்த நபர் கையாள முயற்சி செய்துள்ளார். அப்போது, வெடிகுண்டு வெடித்து பலத்த காயம் அடைந்தார் என்பது தெரியவந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னணியில் சதி ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

வெடிகுண்டு வெடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், அவர் பலியானதாகவும் பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பஞ்சாப் காவல்துறை மூத்த அதிகாரி சதீந்தர் சிங் தெரிவித்ததாவது: வெடிவிபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்துவிட்டார். அவர் பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த வெடி பொருளை மீட்பதற்காக வந்தபோது, தவறுதலாக கையாண்டதன் விளைவாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு நிறைய தடயங்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. பாப்பர் கல்சா மற்றும் ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாபில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பலியானவர் பாப்பர் கல்சாவின் உறுப்பினராக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாரத் மாதா கி ஜே! இந்தியாவுக்கு நாங்க இருக்கோம்! நாட்டுக்காக உயிரையே கொடுப்போம்! பஞ்சாபில் திரண்ட இளைஞர்கள்..!