மேற்கு வங்க அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்ட அரசியல் பூகம்பம் இன்று அரங்கேறியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், இரும்பு மனுஷியுமாக வலம் வந்த மமதா பானர்ஜியின் சர்வாதிகார தலைமைக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், கட்சியின் அதிருப்தி முகாம் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு முக்கிய நட்சத்திர ஹோட்டலில், கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரித்தபிரதா பானர்ஜி தலைமையில் ‘சஸ்பென்ஸ்’ அதிரடி பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. இந்த ‘ஹை-வோல்டேஜ்’ கூட்டத்தில், மமதா பானர்ஜியை கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்குவதாக ‘அரசியல் குண்டு’ ஒன்றை அதிருப்தியாளர்கள் வீசியுள்ளனர்.

கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தை மமதா தரப்பு காற்றில் பறக்கவிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டிய இந்த ‘ரெபல்’ பட்டாளம், தங்களது அணியே ‘உண்மையான திரிணாமூல் காங்கிரஸ்’ (Real TMC) என்று பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும், கட்சியின் புதிய அகில இந்திய தலைவராக (Chairperson) மூத்த சட்டமன்ற உறுப்பினர் அரூப் ராயை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டியுள்ளனர். மமதா பானர்ஜியின் நிழலாகக் கருதப்பட்ட ஃபிர்ஹாத் ஹக்கிம், அரூப் பிஸ்வாஸ் உள்ளிட்ட ‘ஹெவிவெயிட்’ தலைவர்கள் இந்த அதிருப்தி கூடாரத்திற்குத் தாவியிருப்பது, மமதா முகாமுக்குத் தலைச்சுற்றலை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அரூப் ராய்க்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், மமதா பானர்ஜியை வெறும் ‘தலைமை ஆலோசகர்’ என்ற டெட்-எண்ட் பதவிக்கு தள்ளி அழகு பார்க்க விரும்புவதாக ரித்தபிரதா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் ‘சராமாரியாக’ பொரிந்து தள்ளியுள்ளார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு வெடித்த இந்த உட்கட்சி பூசல், தற்போது கட்சியைத் துண்டு துண்டாக உடைக்கும் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை எட்டியுள்ளது. இந்த அதிரடி பொதுக்குழுவில் 30 பேர் கொண்ட புதிய தேசிய செயற்குழுவும் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேடையில் காந்தி, தாகூர், அம்பேத்கர் ஆகியோரின் படங்கள் கம்பீரமாக வீற்றிருக்க, மமதா மற்றும் அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் புகைப்படங்கள் ‘அவுட்’ செய்யப்பட்டுள்ளது தான் தற்போதைய ஹாட் டாபிக். தங்களுக்கு 65-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் பலம் இருப்பதாகக் மார்புதட்டும் இந்த அதிருப்தி அணி, தங்களின் புதிய செயற்குழு முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (EC) முறைப்படி அனுப்பி, கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான ‘ஜோடிப் பூ’ சின்னத்தைக் கைப்பற்ற ‘லீகல்’ யுத்தத்திற்குத் தயாராகி வருகிறது. இதனால் மமதா பானர்ஜி வீழ்வாரா அல்லது மீள்வாரா என்ற பரபரப்பில் ஒட்டுமொத்த இந்திய அரசியலும் உறைந்து போயுள்ளது.
இதையும் படிங்க: பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வழக்கு: கொல்கத்தாவில் பரபரப்பு!